Tuesday, November 11, 2008

அலங்காரம்-11: "சும்மா" இரு! அம்-மா பொருள்!

கந்தரலங்காரம், ஒரு மாத சூறாவளி(அ)இடைவெளிக்குக்குப் பின் மீண்டும் தொடர்கிறது!:) "சும்மா" இருப்பது எப்படி? என்பது தான் அடுத்த பதிவு-ன்னு முருகனுக்குத் தெரியும் போல! அதனால் தான் என்னைய ஒரு மாசம் பூரா "சும்மா" இருக்க வச்சிட்டான்! வாங்க பார்க்கலாம்!:)

"சும்மா" இருக்கறது-ன்னா என்ன? பதிவு போடாம, பின்னூட்டம் இடாம, பதிவு படிக்காம, தமிழ்மணம் பக்கமே வராம, இப்படிப் பல வித "சும்மா" இருத்தல்களா? ஹிஹி!
* "சும்மா" இருக்கும் திறம் அரிதே! - என்று தாயுமானவர் பாடுகிறார்!
* "சும்மா" இரு, சொல்லற என்றலுமே! அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! - என்று இதே அருணகிரி அநுபூதியில் சொல்றாரு!

"சும்மா" இரு-ன்னு சொன்ன ஆன்மீகவாதிகளும் சும்மா இருக்க வேணாமா? அதை விட்டுட்டு எப்படி அநுபூதி பாடலாம்? அப்படின்னா அவிங்களும் "சும்மா" இல்லை! ஏதோ "சும்மா"-வைப் பற்றிச் சும்மாச் சொல்லிட்டுப் போயிட்டாங்க! அப்படியா என்ன? :)
ஹா ஹா ஹா! இன்னிக்கி அலங்காரத்தைச் "சும்மா" பாக்கலாம் வாங்க! :)





(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

சொல்லுகைக்கு இல்லை என்று, எல்லாம் இழந்து, சும்மா இருக்கும்
எல்லையுள் செல்ல என்னை விட்டவா
! இகல் வேலன், நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக், கல்வரை கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரை தோள் அண்ணல் வல்லபமே!


இகல் வேலன் = இகல்-னா வலிமை! இகல்-ன்னு வரும் குறள் என்ன? சொல்லுங்க பார்ப்போம்! வலிமை வாய்ந்த வேலன்!

நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியை = இது யாருப்பா? கொல்லி-சொல்லின்னு?
கொல்லி என்றால் இந்தளப் பண். நாதநாமக்ரியை ராகம்.
பேசினாலே இந்தளம் போலப் பேசும் சொல்லி -வள்ளி! அவள் எப்பமே நாத நாமம் தானே பேசுவாள்! அதான் அவள் பேச்சே நாதநாம ராகமாய், இந்தளமாய் ஆகிவிட்டது!

இறைவனின் நாமங்களுக்கு இறைவனைக் காட்டிலும் அவ்வளவு பெருமை!
முருகாஆஆஆஆ என்று ஒரு முறை உரக்கச் சொல்லிப் பாருங்கள்!
என்ன, முருகனை விட இனிக்குதா? :) அதான் நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!
நாத நாமத்தைச் சொல்லிக்கிட்டே இருந்தா, நம்மையும் அறியாமல், நம் குரலும் கனிவாகி, இனிமையாகி, இந்தளம் ஆகிவிடும்!

கல்வரை, கொவ்வைச் செவ்வாய், வல்லியை = கல் மலையில் வாழ்பவள், கொவ்வைப்பழம் போல் சிவப்பான வாயாடி, வல்லிக் கொடி போன்று மெலிந்த வள்ளி!

கல்-மலை என்றால் அதிகம் பசுமை இல்லாத மலை! வள்ளி மலை/திருத்தணி போய் பார்த்தால் தெரியும்! கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும் என்பது அப்பர் தேவாரம்! கொவ்வை-ன்னா கொய்யாப் பழமா? இல்லையில்லை!
கொவ்வைப் பழம் தான் திரிந்து...கோவைப் பழம் ஆகி விட்டது! கோவைப் பழம்-ன்னா உடனே கோயம்புத்தூர் பழம்-ன்னு சன்னமா வந்து நிக்கப் போறாங்க! :)

கோவைப் பழம் பாத்து இருக்கீங்களா? வீட்டுல கோவக்கா கறி செய்வாங்களா?
கிளிக்கு ரொம்ப பிடிக்குமே, அந்தக் கோவைப் பழம்! அதான் கிளி மூக்கு போலவே சிவப்பான உதட்டைக் கொவ்வைச் செவ்வாய்-ன்னு சொல்லுறாங்களோ?

புல்கின்ற மால்வரை தோள் அண்ணல் = அவளை அணைத்த வண்ணம் காட்சி தரும் அண்ணல்! அவனுக்கு மால்+வரை+தோள் = மயங்கும் மேகம்+மலை+தோள்!
தோள் இரண்டும் மலை போல் குவிந்து இருக்கு! தினமும் ஜிம்-முக்குப் போய் Arm Stretches பண்ணுவான் போல முருகன்! :)
அந்தத் தோள் மலையின் மீது முருகனின் முடிச் சுருள், மேகம் போல வந்து விழுகிறது! அதை ஓவியமா வரைஞ்சி காட்டுறாரு அருணகிரி!

வல்லபமே = அவனுக்குப் பிடித்தமான திறம்! சாமர்த்தியம்! அட, முருகனுக்கு என்னாங்க சாமர்த்தியம்? வேல் விடுறதா? மயில் மேல ஸ்டைலா வரதா? உம்...அதை எல்லாம் சொல்லுறத்துக்கு இல்லையாம்!

சொல்லுகைக்கு இல்லை = சொல்லுன்னு சொன்னா, சொல்ல முடியாது!
எல்லாம் இழந்து = யாவற்றையும் இழந்து
சும்மா இருக்கும் எல்லையுள் = சும்மா இருக்கும் ஒரு எல்லைக்குள்
செல்ல எனை விட்டவா = என்னைச் சென்று சேர்ப்பித்தவா!

உன் வல்லபத்தைச் சொல்லத் தான் முடியுமா?


ஏதாச்சும் புரிஞ்சிச்சா?
ஹா ஹா ஹா! ஏதோ நாதநாமக்கிரியை புரிஞ்சுது, கொவ்வைச் செவ்வாய் புரிஞ்சுது, மால் வரை தோள் புரிஞ்சுது! நல்லா இருந்திச்சி வர்ணனை! :)

ஆனால் "சும்மா" இருக்கும் எல்லை-ங்கிறாரு! அங்க கொண்டு போய் முருகன் விட்டாரு-ன்னு வேற சொல்றாரு!
எல்லாம் இழந்து = ஒட்டு மொத்தமா இழந்து! - இழப்பதில் என்னாங்க பெருசா சாமார்த்தியம் வேண்டி இருக்கு? இந்த அருணகிரி ரொம்பவே "லொள்ளு" செய்கிறாரோ? ("லொள்ளு" என்ற சொல் ஒவ்வாதவர்கள், இந்த அருணகிரி "போக்கு" காட்டுகிறாரோ என்று மாற்றிப் படித்துக் கொள்ளவும்!)

இன்னிக்கி பார்க்கப் போறது மிகவும் விசேடமான பாட்டு! மிகவும் அனுபவிச்சிப் படிக்கணும்! யோசிச்சிட்டுப் படிக்கணும்! படிச்சிட்டும் யோசிக்கணும்!
அதுனால இன்னிக்கி ரெண்டு பாட்டு கிடையாது! ஒரே பாட்டுக்குத் தான் பொருள் பாக்கப் போறோம்! சரியா?

மீண்டும் அதே கேள்வி! - "சும்மா இரு" என்றால் என்ன?
* எதுவும் பேசாமல் மெளன விரதம் இருப்பதா? சொல்+அற ன்னு வேற சொல்றாரு!
அதுவாத் தான் இருக்குமோ? ஆனா பின்னாடியே பாடும் பணியே பணியாய் அருள்வாய்-ன்னு வேற சொல்லிடறாரு! ஆக, அது கிடையாது!

* எந்த வேலையும் செய்யாம, அலட்டிக்காம, சும்மா இருப்பதா?
* கடமையைச் செய், பலனை எதிர் பார்! (பாராதே)-ன்னு சும்மா இருப்பதா?
* கடமையைச் செய்யும் போது, வருமா வருமா-ன்னு பலனை எதிர்பார்த்துக்கிட்டே செய்யாம, கடமையைச் சிதறாமல் செஞ்சி சும்மா இருப்பதா?

* யார் கூடவும் எதுவும் பேசாமல், யார் கூடவும் எதுவும் வச்சிக்காமல், சும்மா ஒதுங்கி இருப்பதா?
* சரி, யார் கூடவும் எதுவும் வச்சிக்கலை! ஆனால் தனியா இருந்தால் கூட மனம் எங்கெங்கோ போகுதே! என்ன செய்ய?
* பழைய காதலி வீட்டுக்குப் போயி வருது! நிலத் தகராற்றில் வெட்டிக் கொன்றவன் வீட்டுக்குப் போயி வருது! கடனை அடைக்காமல் நின்ற கோர்ட் வாசலுக்குப் போயி வருகிறது!

* பாவனா வீட்டுக்குப் போயி வருது! கள்ளப் படம் பார்க்கப் போயி வருது! :)
* ஈழத்துக்குப் போய் வருது! பின்னூட்டத்தில் சண்டை போட்டவர்கள் பதிவுக்கு எல்லாம் கூடப் போயி வருது! :)

* ஒரு வருசமா பேசாமல் கோபமாய் இருக்கும் என் உயிர் நண்பன் வீட்டுக்குப் போயி வருது!
* திருமலை மேல் ஏறி, தடுப்பார் யாருமில்லாமல் கருவறைக்குள் போயி வருது!
* இது நல்லது தானே! மனசால சாமியைப் பார்ப்பது நல்லது தானே! அதைக் கூடச் செய்யாமல் "சும்மா இரு"-ன்னா எப்படி இருக்குறதாம்? அடப் போங்கப்பா! :)

இப்போ சொல்லுங்க, சும்மா இருத்தல் என்றால் என்ன?

மெய்யாலுமே ஒருத்தர் சும்மா இருக்கத் தான் முடியுமா? கடவுளையாச்சும் நினைப்போம்-ல? சும்மா கிட! அது கூட வேணாம் என்றா சொல்லி இருப்பாரு அருணகிரி?
அப்படின்னா இதுல வேற ஏதோ ஒரு விஷயம் இருக்கணும், இல்லையா?
அந்த வரியை இன்னொரு முறை நல்லாப் பாருங்க! = எல்லாம் இழந்து, சும்மா இருக்கும், எல்லையுள் செல்ல, எனை விட்டவா!


ஆங்...இப்போ தாங்க கொஞ்சம் லேசுமாசாப் புரியிது!

நம்மாலேயும் சும்மா இருக்க முடியுமாம்! எப்படி? = எல்லாம் இழந்து! எல்லாம் இழந்தாச் சும்மா இருக்கலாமாம்!
ஆசையைப் பாருங்க! எதை எல்லாம் இழக்கச் சொல்றீங்க? = சிந்தனை, சொல், செயல்! (மனம், வாக்கு, காயம்)! அட இதெல்லாம் இழந்தா ஜடமா ஆயிட மாட்டோமா? என்னா பேச்சு பேசறீங்க நீங்க?

உம்ம்ம்ம்ம்.....அன்னிக்கி வீட்டுல செம ரகளை!
வேறு யாருக்கு? எனக்கும் தங்கச்சிக்கும் தான்! வாடீ, போடா-ன்னு எல்லாம் வாய் வார்த்தை முத்திப் போயி, கை கலப்பும் வந்தாச்சு! மனசுக்குள்ள வேற கறுவுகிறோம்...உன்னைய இன்னிக்கி ஒரு கை பாக்காம வுடறதில்லை! ஒரே ரணகளம்! :)

எங்கிருந்தோ அம்மா ஓடியாறாங்க! இந்தக் காட்சியைப் பாத்துட்டு திகைச்சிப் போயி நிக்குறாங்க! ஒன்னுமே சொல்ல முடியலை அவங்களால! இதுங்களுக்கு இப்போ எடுத்துச் சொன்னா ஒன்னும் மண்டையில் ஏறாது-ன்னு நல்லாத் தெரியுது! குரலை உசத்தி ஒரு கத்து கத்துறாங்க பாருங்க! அவிங்களுக்கு மூச்சு வாங்குது!
"யப்பாஆஆஆ...கொஞ்சம் "சும்மாஆஆஆஆ" இருக்க மாட்டீங்களா???"

அவ்வளவு தான்! ஒரே நிசப்தம்!
* பாவி! உனக்கு இருக்குடா பூசை என்று கறுவுதல் நின்னு போச்சு = மனம்!
* நீ தான்டீ காரணம் என்ற பதிலுக்குப் பதில் பேசுவது நின்னு போச்சு = வாக்கு!
* கை நீட்டி அடிச்சிப் பேசறதும் நின்னு போச்சு = காயம்(உடல்)!
இப்படி மனம்-வாக்கு-காயம், அத்தனையும் ஓர் நொடிக்குள் அடங்கிப் போச்சி! ஏன்? எப்படி?

ஏன்னா....அம்மா மேலே எங்க ரெண்டு பேருக்குமே பாசம்!
அவிங்க மூச்சு வாங்கி நிக்குறதைப் பாத்த அடுத்த விநாடி...

"எங்கள்" சொல், "எங்கள்" செயல், "எங்கள்" சிந்தனை, "எங்கள்" நியாயம், "எங்கள்" ஈகோ!
= எல்லாம் அற, எங்களை இழந்த நலம்! எங்களை "இழ"ந்தாச்சு! "சும்மா" இருந்தாச்சு!

பேச்சு வளரவே இல்லை! உம்ம்ம்ம்ம்-ன்னு ஒரே நிசப்தம் தான். கொஞ்ச நேரத்துக்கெல்லாம், "அம்மா பசிக்குதும்மா, சாப்பாடு போடுங்க!" :)



கந்தர் அநுபூதி:
* எல்லாம் அற, என்னை "இழந்த" நலம்! சொல்லாய் முருகா! - 2nd செய்யுள்!
* "சும்மா இரு", சொல்லற, என்றலுமே! அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! - 12th செய்யுள்!
கந்தர் அலங்காரம்:
* "எல்லாம் இழந்து + சும்மா இருக்கும்", எல்லையுள் செல்ல, எனை விட்டவா!

அநுபூதியில் தனித்தனியாகச் சொன்ன தத்துவத்தை,
இங்கு அலங்காரம் என்பதால் கோர்த்து விடுகிறார் பாருங்கள் அருணகிரி!
இணைத்துப் பார்த்தால் இனிமை புரியும்!
அது துற-அறமோ, இல்-அறமோ, இணைப்பே இனிப்பு! :)

எல்லாம் அற, என்னை இழந்த நலம்
= இதுவே பரிபூர்ண சரணாகதி!
எல்லாம் அற = சர்வ தர்வமான் பரித்யஜ்ய
என்னை இழந்த நலம் = (என்னை இழந்து, அவனையே) மாம் ஏகம் சரணம் வ்ரஜ!
சரணம் என்பதே நலம்! நம்மை அவனுக்கு இழந்த நலம்! நம் இழப்பு என்பது, நமக்கே நலம் ஆகி விடுவது, இங்கு மட்டுமே!

சும்மா இரு! "அம்மா" பொருள் ஒன்றும் அறிந்திலனே!
சும்மா இரு! சொல் அற (பேசாதே)!-ன்னு முருகன் சொல்லிட்டுப் போயிட்டான்! அம்மாடி! பொருள் ஒன்றும் அறியலையே! - அப்படியா பாடுகிறார் நம் அருணகிரி? இல்லை! இல்லை! இப்போ பாருங்க...

சும்மா இரு! "அம்- மாபொருள்" ஒன்றும் அறிந்திலனே!
"சும்மா இருத்தல்" என்பது மா பொருள்! பெரும் பொருள்! ஞான ரகஸ்யம்!
நிர்விகல்ப சமாதி நிலை-ன்னு கூடச் சொல்லுவாங்க!

அதெல்லாம் போயும் போயும் எனக்கு வருமா? நானோ (அருணகிரி) புலனடக்கம் கற்காதவன்! ஞான-கர்ம-பக்திகள் எதுவும் உளமாரத் தெரியாது! ஆனால் தெரிந்தது போல் பேசுவேன்! ஏதோ முருக-அன்பு கொஞ்சமா நெஞ்சில் மிதக்கிறது! அவ்வளவு தான்!

அம் மாபொருள் எல்லாம் அடியேனுக்குத் தெரியாது! ஆனாலும் முருகனருளால் "சும்மா" இருந்தேனே!
அம்- மாபொருள் ஒன்றும் அறிந்திலனே! என்றாலும் "சும்மா" இருக்க முடிந்ததே! எப்படி?



சும்மா இருக்க மாட்டீங்களா? என்று அப்போது அம்மா கத்தினார்கள்!
அம்மா கத்தும் போது, நம் சுய பிரதாபங்களை இழந்து, "சும்மா" இருந்தோமே!
சும்மா இரு! சொல்லற! என்று இப்போது இறைவன் கழறுகிறான்!
அவன் கழறும் போது, நம் சுய பிரதாபங்களை இழந்து "சும்மா" இருக்க முடியாதா?

முடியாது! முடியாது! முடியாது!
நம் வேண்டுதல்களை எல்லாம் நடத்திக் கொடுக்கவே அவன்!
நமக்கு மோட்சம் கொடுக்கவே அவன்!
என்று "நம்"மை முன்னே தள்ளி, அவனைப் பின்னே தள்ளினால்? = முடியாது!

முடியும்! முடியும்! முடியும்!
அவன் முக உல்லாசத்துக்கு நாம்!
அவன் திருவுள்ள உகப்புக்கு நாம்!
என்று அவனை முன்னே தள்ளி, "நம்"மைப் பின்னே தள்ளினால்? = முடியும்!

* ஒரு பிறவிக்கான அம்மாவை முன்னுக்குத் தள்ளினோம்! "சும்மா" இருக்க முடிந்தது!
* ஒவ்வொரு பிறவிக்குமான அம்மாவை முன்னுக்குத் தள்ளினால், "சும்மா" இருக்க முடியும்!

யோகிகளாலும், ஞானிகளாலும் மட்டும் தான் "சும்மா" இருக்க முடியும் என்பதில்லை! அன்றாடங் காய்ச்சிகளான நம்மால் கூடச் "சும்மா" இருக்க முடியும்!
நல்ல விஷயங்கள் நடக்க, குடும்ப நற் காரியங்கள் நடக்க, பொது நன்மை நடக்க, அன்மீக மறுமலர்ச்சி நடக்க, மக்கள் தொண்டு நடக்க.....

நடக்க வேண்டியதை முன்னுக்குத் தள்ளி,
"நம்"மைப் பின்னுக்குத் தள்ளினால்.....
குதர்க்கம் குறையும்! "சும்மா" இருப்போம்!


மனதில் இந்த அன்பு தங்கினால்,
வாக்குச் சண்டை/உடல் சண்டை/மனச் சண்டை போட மாட்டோம்!
இப்படி மனம்-வாக்கு-காயம் எல்லாம் இழந்து, நம்மைக் கொஞ்சம் பின்னே தள்ளினால்?

என்னை இழந்த நலம் = இதுவே சரண நலம்! "சும்மா" நலம்!
சரண கதி = இதுவே அம்-மா பொருள்! "சும்மா" பொருள்!


சரணம் சரணம் சண்முகா சரணம்! ஹரி ஓம்!


பின் குறிப்பு:
"சும்மா இரு" என்பதற்கான பொருளை "நிர்விகல்ப சமாதி" என்றே பெரியோர்களும், ஆன்றோர்களும் இந்தப் பாடலுக்கு விளக்கமாகத் தருகின்றனர்!
விருப்பு-வெறுப்பு, இருள்-ஒளி, இன்பம்-துன்பம் என்ற இரட்டைகளில் சிக்கிக் கொள்ளாத நடுநிலை! இது மிகவும் சரியான விளக்கம் தான்! தத்துவ-ஞான ரகசியம்!

ஆனால், இதை உபன்னியாசமாகப் பேசி விட்டு, அப்புறம் ஒரு பத்தடி தள்ளியே வைத்து விடுகிறோம்! "சமாதி நிலை"ன்னு பேரைப் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது! ஒதுங்கிக் கொள்கிறோம்!

அதனால் தான் விளக்கத்தை மரபு வழியில் இருந்து சற்றே மாற்றி அமைத்தேன்! வீட்டுச் சண்டையில் "சும்மா" போவதை எடுத்துக்காட்டாக வைத்தேன்!
இதில் பிழையேதும் இருந்தால், சாதனா-சாதன கர்ம நிஷ்டர்களும், சித்த புருஷர்களும் அடியேனை மன்னிக்க வேண்டும்!
நம் வலையுலக ஆன்மீகப் பெரியவர்களும் அடியேன் கருத்தினைப் பொறுத்தருள வேண்டுகிறேன்!

"சும்மா இரு" என்பது ஞானிகளுக்கு மட்டும் அல்ல! நமக்கும் தான்! என்பதைப் புரிந்து கொள்வதே அடியேன் நோக்கம்!
அம்மா, அம்-மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! முருகா! முருகா!!

Tuesday, September 23, 2008

அலங்காரம்-09/10: முருகன் அருணகிரிக்குச் செய்த உபதேசம் என்ன?

முருகன் தந்தைக்கு உபதேசம் செய்தான்! எல்லாருக்கும் தெரியும்! ஆனா அவன் என்ன-ன்னு உபதேசம் செய்தான்? அது எல்லாருக்கும் தெரியுமா? அதே உபதேசத்தை அருணகிரிக்கும் பின்னாளில் செய்தானாம்! அருணகிரியே சொல்றாரு! முருகன் சொன்னான்-ன்னு சொல்றாரு, ஆனா என்ன சொன்னான்-ன்னு சொல்லாம கொஞ்சம் லொள்ளு பண்ணுறாரு! பார்க்கலாம் வாரீங்களா, இன்னிக்கி அலங்காரத்துல? :)

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து, உச்சியின் மேல்
அளியில் விளைந்தது, ஒரு ஆனந்தத் தேனை, அநாதி இல்
வெளியில் விளைந்த, வெறும் பாழை பெற்ற, வெறும் தனியை
தெளிய விளம்பிய வா முகம் ஆறுடை தேசிகனே!

(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

மேலோட்டமான பொருள்:
சிவ மயமான மலையின் மீதுள்ள ஆனந்த மயமான தேன்! - அதுக்குப் பேரு சிவானந்தம்!
முதல் முடிவு என்று இல்லாது, ஆனந்த வெளியாக விளங்கும் தனிமை நிலை! சும்மா இருத்தல்! அதை, ஆறுமுக தேசிகன் எனக்குத் தெளிவாக உபதேசித்தானே! என்ன ஆச்சரியமோ?

பாட்டைக் கொஞ்சமாப் பிரிச்சி மேயலாம்! இது தத்துவங்கள் நெறைஞ்ச பாட்டு! அதுனால கொஞ்சம் லைட்டாப் பிரிச்சி மேயறேன்! :)
மீதியை முருக பக்தர்கள், பின்னூட்டத்தில் விளக்கேற்றி விளக்குவார்கள்!

ஒளியில் விளைந்த = ஒளியில் என்ன விளையும்? ஒளியில் தான் உணவுக்கே உணவு விளையுது!
ஒளிச் சேர்க்கை - Photo Synthesis கேள்விப்பட்டிருக்கீங்க தானே அறிவியல் வகுப்பில்? செடி கொடிகள் எல்லாம் ஒளியில் தான் உணவு தேடிக் கொள்கின்றன!
செடிகளை விலங்குகள் உண்கின்றன!
விலங்குகளை மனிதன் உண்கிறான்!
மனிதனை?....
மனிதனை எது உண்கிறது?
அகங்காரம் உண்கிறது! ஹா ஹா ஹா! அடியேன் சொல்வது சரியா மக்களே? :)

உயர் ஞான பூதரத்து = உயர்ந்த ஞானமாகிய மலை! ஒளியில் விளைந்த ஞான மலை!
மலை எப்படிங்க ஒளியில் போய் விளையும்? கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க! ஆத்ம ஒளி - அதில் எழும்பும் ஞான மலை!

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின், வாக்கினிலே ஒளியுண்டாகும் என்றான் பாரதி!
ஆத்மாவில் சத்திய ஒளி, விளைய விளைய, ஞானம் என்னும் மலை மேலே மேலே எழும்புது!

இன்னும் ஈசியாப் புரிஞ்சக்கணுமா? எப்பவாச்சும் கொஞ்ச நாள் ஏதோ ஒரு சோகத்தில் இருந்து விட்டு, திடீர்-னு உங்களுக்கே ஒரு தெளிவு பிறந்திருக்கும் அல்லவா?
மனதில் தெளிவு-ன்னு ஒன்னு, விளைய விளைய, சிந்தனை மேலே மேலே எழும்புது!
ஆத்மாவில் சத்திய ஒளி, விளைய விளைய, ஞானம் என்னும் மலை மேலே மேலே எழும்புது!

உச்சியின் மேல் = அந்த ஞான மலையின் உச்சியில் மேல் என்ன இருக்கு?
அளியில் விளைந்தது ஒரு ஆனந்தத் தேனை = அளி-ன்னா கருணை! தமிழ் மொழியில் சொல்லும் பேரும் எப்படியெல்லாம் இருக்குன்னு பாருங்க!
கருணை இருந்தாத் தானே அளிக்க முடியும்? அதான் அளி-ன்னே கருணைக்குப் பேர் வச்சிருக்காங்க பண்டைத் தமிழ்ச் சான்றோர்!

இப்படி ஆத்ம ஒளியில், எழுந்த ஞான மலையின் மேல் என்ன இருக்கு? என்ன இருக்கணும்? ஞானமா? கர்மமா? பக்தியா? ஹிஹி....கருணை இருக்கணுமாம்!
நிறைய பேருக்கு, சாதகம் செய்யறேன் பேர்வழி-ன்னு ஆத்மா, ஞானம்-ன்னு எல்லாம் பேசிட்டு, அந்த மலையில் என்ன எழுப்பிக்கறாங்க?
ஆணவம், படோபடம், விளம்பரம், புகழ்ச்சி மாயை - இதெல்லாம் தான் ஏத்திக்கறாங்க!

எத்தனை "ஸோ கால்ட் ஸ்வாமி-ஜிக்களைப்" பார்க்கிறோம்! ஆனா கொஞ்ச நாள் தான்! பாரம் தாங்காம, கொஞ்ச நாள்-லயே மலை மீதிருந்து, அதல பாதாளத்திற்கு விழுந்துடறாங்க! அப்போது சாதாரண மக்களே, இந்த முன்னாள் சாதகர்களைக் கைத்தூக்கி விட வேண்டி இருக்கு! :)

ஆக, ஆத்ம ஒளியில் எழுந்த ஞான மலையின் மேல்...கருணை இருக்கணும்!
தான் நரகம் புகினும் பரவாயில்லை! அன்பர்களுக்கு மோட்சம் கிட்டினால் போதும் என்ற பரம கருணை! கேழில் பரங்கருணை! அருட்பெருஞ் சோதி, தனிப்பெருங் "கருணை"!
காரேய்க் கருணை இராமானுசா என்று அதான் கருணையை முன் வைத்து அவரைச் சொன்னார்கள்! பரம காருண்ய காரணத்தால் தான் யதி-ராசர், துறவிக்கெல்லாம் அரசர் என்று போற்றினார்கள்! அருட் பெரும் ஆத்ம சோதியில் தனிப் பெருங் கருணை இருக்கணும் என்று வள்ளலார் எம்புட்டு நுட்பமாச் சொல்லி இருக்காரு பாருங்க!

கருணை தான் ஞானியின், யோகியின், பக்தனின் பரம லட்சணம்!
ஆத்ம ஒளியில் எழுந்த ஞான மலையின் மேல்...கருணை இருக்கணும்!
அப்படிக் கருணை இருந்தால், தேன் விளையும்! அளியில் (கருணையில்) விளைந்தது ஒரு ஆனந்தத் தேனை என்கிறார் அருணகிரி! என்ன தேன்?

சிவானந்தம் என்னும் தேன்!
அம்பிகானந்தம் என்னும் தேன்!
முருகானந்தம் என்னும் தேன்!
மாலானந்தம் என்னும் தேன்!
அச்சுதானந்தம் என்னும் தேன்!
அத்தனையும் கிருபானந்தம் என்னும் தேன் தான்! கருணையே சிவம்! அன்பே சிவம்! காரேய்க் கருணை உடையவருக்குக் கருணையே பரமம் சிவம்!

அநாதி இல் வெளியில் விளைந்த = ஆதி=தோற்றம் x அநாதி=முடிவு! முடிவில்லாத வெட்ட வெளி = Cosmos. அம்பலவாணர் நடமிடும் வெளி! அங்கு என்ன தான் விளையும்?

வெறும் பாழை = வெற்றிடம் தான் விளையும்! அண்ட வெளியில் பாழ் என்னும் வெற்றிடம் தான் விளையும்! Vaccum! Volume of space that is empty of matter!
Quantum Theory உங்களுக்குப் படிக்கப் பிடிக்குமா? அவிங்களுக்கு இந்திய இறையியலில் அறிவியல் எப்படி எல்லாம் பின்னிப் படர்ந்து இருக்கு-ன்னு ஈசியாப் புரியும்!

பாழ் = கணிதத்தில் Zero என்பதை விட இங்கு Null என்று கொள்ளலாம்! நாதம் என்பார்கள்! நாத விந்து கலாதீ நமோ நம! ஒன்றுமில்லாத நிலை! கொஞ்சம் கவனிச்சிப் பாருங்க - அந்த "ஒன்றும்" இல்லாத நிலை என்பதில் "ஒன்று" இருக்கு அல்லவா?

ஹிஹி! இதுக்கு மேலச் சொன்னா, இதைப் படிச்சிக்கிட்டு வர எங்க அம்மா பயந்துருவாங்க! நிப்பாட்டிக்கறேன்! :) நீங்க பின்னூட்டத்தில் தொடருங்க! நம்ம பையன் மட்டும் இதப் பத்திப் பேசலை; ஜீவா பேசறாரு, குமரன் பேசறாரு, ராகவன் பேசறாரு, மெளலி பேசறாரு, பாலாஜி பேசறாரு, அம்பி பேசறாரு-ன்னு பார்த்தாங்கன்னா, அவங்க பயம் போயிடும்! :))

வெறும் தனியை = "ஒன்றும்" இல்லாத என்பதில் "ஒன்று" இருக்குன்னு சொன்னேன்-ல? அந்த ஒன்றைத் தான் வெறும் தனி என்கிறார் அருணகிரி!
அந்த வெறும் தனி தான் பிரணவம்! அது தான் ஓம்!

தெளிய விளம்பியவா = அந்த ஓங்காரத்தைத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தவனே!
முகம் ஆறு உடை தேசிகனே = ஆறு முகங்களை உடைய தேசிகனே (குருவே)! அருணகிரிக்குச் சொன்னது போல், அடியோங்களுக்கும், குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

(குறிப்பு: இந்தத் தேசிகன் என்னும் சொல்லையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! அருணகிரியின் எண்ணப் போக்கையும், ஆழ் மனச் சிந்தனைகளையும் புரிந்து கொள்ள இதுவும் உதவும்! மாதவிப் பந்தலில் பின்னர் பார்ப்போம்!)



தேன் என்றும், பாகு என்றும், உவமிக்க ஒணாத மொழி, தெய்வ வள்ளி
கோன், அன்று எனக்கு, உபதேசித்தது ஒன்று உண்டு! கூற அற்றோ?
வான் அன்று! கால் அன்று! தீ அன்று! நீர் அன்று! மண்ணும் அன்று!
தான் அன்று! நான் அன்று! அசரீரி அன்று! சரீரி அன்றே!




மேலோட்டமான பொருள்:
தேன்/பாகு என்றெல்லாம் உவமை சொல்ல முடியாத அளவுக்கு தெய்வ-வள்ளி மொழி இனிக்கிறது! தலைவன் முருகன்! அவன் முன்பொரு நாள், எனக்கு உபதேசித்த "ஒன்னு" இருக்கு! அதைக் கூற முடியுமோ? வேண்டுமானால் ஒரு குறிப்பு கொடுக்கிறேன்!
அது வானம் இல்லை, வாயு இல்லை! தீ இல்லை! நீர் இல்லை! மண்ணும் இல்லை!
தானும் இல்லை! நானும் இல்லை! அருவமும் இல்லை! உருவமும் இல்லை!

என்ன மக்களே, அருணகிரியார் கொடுத்த க்ளூ ஏதாச்சும் புரிஞ்சிச்சா? இந்தப் பாட்டைப் பிரிச்சி மேய்ஞ்சேன்னா, என்னை மேய்ஞ்சிருவாய்ங்க! :)
அருணகிரி என்னமா சஸ்பென்ஸ் கொடுக்கறாரு! சான்ஸே இல்லை! அருணகிரி முதலில் பக்தர்! முடிவிலும் பக்தர்! ஆனால் அவர் தெளிவுக்கு, அவரைச் சித்தர் என்று தாராளமாகக் கொண்டாடலாம்! அம்புட்டு நுட்பம்!

தேன் என்றும், பாகு என்றும், உவமிக்க ஒணாத மொழி, தெய்வ வள்ளி கோன்! = நல்லாப் பாருங்க தெய்வ வள்ளி என்னும் சொற்செட்டுகளை!
இதுக்குச் சில பேரு தெய்வத்தன்மை பொருந்திய வள்ளி-ன்னு மட்டும் பொருள் எடுத்துப்பாய்ங்க! ஆனா தெய்வ வள்ளி-ன்னா, தெய்வானை-வள்ளி! அப்படியும் பொருள் எடுத்துக்கலாம்! பாருங்க அப்பவே அருணகிரியார் ஆடும் பதிவுலக விளையாட்டை! :)

அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு = அன்று-ன்னா என்று? என்னிக்கி தெய்வ-வள்ளி கோன் அவருக்கு உபதேசித்தான்? அருணகிரி வரலாறு அறிந்தவர்கள் அறியத் தர வேணும்!

கூறவற்றோ = சொல்லத் தான் முடியுமா?

வான் அன்று! கால்(காற்று) அன்று! தீ அன்று! நீர் அன்று! மண்ணும் அன்று! = ஆக பஞ்ச பூதங்களும் இல்லை!
கால் கொண்டு மெள்ளமா நடக்கலாம், வேகமா ஓடலாம், குதிக்கலாம், இன்னும் பல...அதான் காற்றுக்கும் கால் என்று பெயர்! தென்றல் காற்றைச் சிறு கால் அரும்பத் தீ அரும்பும் என்று சொல்லும் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்! தமிழ் மொழியின் இடுகுறிப் பெயர்களை விட காரணப் பெயர்களின் அருமையே அருமை!

தான் அன்று! நான் அன்று! அசரீரி அன்று! சரீரி அன்றே! = தானும் இல்லை! நானும் இல்லை! அருவமும் இல்லை! உருவமும் இல்லை!

இப்படி எதுவுமே இல்லை இல்லை-ன்னா, அப்ப என்ன தான்-யா அந்த உபதேசம்?
சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம், "இரு" செவி மீதிலும் பகர்-ன்னு, அப்படி என்னய்யா சொல்லிட்டான் எங்க முருகன்?
முருகன் இப்படியெல்லாம் கன்னா பின்னா-ன்னு க்ளூ கொடுத்தா பொருள் சொன்னான்?
அருணகிரியார் மட்டும் ஏன் இப்படிப் பண்ணுறாரு? ரொம்ப தான் லொள்ளு பண்ணறாரோ? :)

அடுத்த செவ்வாயில் அடுத்த அலங்காரத்தில் இதைச் சந்திப்போம்! சிந்திப்போம்!

Wednesday, September 17, 2008

அலங்காரம்-07/08: முருகன், வள்ளி, தினை மாவு - எதில் சுவை அதிகம்?

பழனி பஞ்சாமிர்தம் அப்படியே நாக்குல கரையும்! ஆனா பழனி முருகன்? அவன் தான் கோபம் கொண்ட பாலகனாச்சே! அவன் கை விரலை உண்டால் காரமாக இருக்குமோ என்னவோ? என்ன சொல்றாரு அருணகிரி? பார்க்கலாம் வாங்க!

பெரும் பைம் புனத்தினுள், சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை, மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள,
அரும்பும் தனி பரமானந்தம்! தித்தித்தது அறிந்தவன்றோ!
கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அற கைத்ததுவே!

(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)


மேலோட்டமான பொருள்:
பசுமையான தினைப் புனம். அதில் தினைக் கதிரைக் காவல் காக்கிறாள் வள்ளி! அவள் திருமார்பினை விரும்புகிறான் குமரன்!
மெய்யன்பு ஒன்றினால் மட்டும் அவனிடம் ஒன்றினால்...ஆனந்தம் அரும்பும்!

அந்த ஆனந்தத்தை ஒரு முறை ருசித்து விட்டால், கரும்பு துவர்க்கும், தேன் புளிக்கும்! இவையெல்லாம் கசந்து போய்,
கந்தன் களிப்பிலே, முருகன் முனைப்பிலே-ன்னு அந்த எண்ணம் ஒன்றே போதும்! அதுவே தித்திக்கும்! என்னை நீ வந்துற்ற பின், சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!

இப்போ பிரிச்சி மேயலாமா?
ஹிஹி! மொத கேள்வி! சில பேர் வெளிப்படையாக் கேட்டுருவீங்க! சிலர் மனசுக்குள்ளாற மட்டும் யோசிச்சிப்பீங்க!
சிலர் சாமிப் பாட்டாச்சே-ன்னு கண்டும் காணாமப் போயிடுவீங்க! :)
அது ஏன் முருகன் வள்ளி கொங்கையை (திருமார்பை) விரும்பனும்? ஏன் அருணகிரி இப்படி எல்லாம் பாடுறாரு?

இது முருகன் நிஜமாலுமே விரும்புவதா?
இல்லை யாரையோ மனசுல வச்சிக்கிட்டு, நைசா தன் சொந்தக் கருத்தை அருணகிரி எழுதிட்டாரா? (அடியேன் மீதும் இப்படி ஒரு குற்றச்சாட்டு நம் அன்பர்களால் சொல்லப்படுவது உண்டு! :))

இல்லை, அருணகிரி ஆண் என்பதால், இப்படி ஆணாதிக்கமா எழுதிட்டாரா? இல்லை, இது அக்கால புலவர்கள் வழக்கமா? இதையே ஒரு பெண் கவிஞர் எழுத முடியுமா?
இது கம்ப ரசமா? கந்த ரசமா? காதல் ரசமா? இல்லை வி-ரசமா? :)
சொல்லுங்க பார்ப்போம்!

கொங்கை என்ற சொல் கம்பராமாயணத்தில் எங்கெல்லாம் வருதுன்னு CTRL+F செஞ்சி, பேரறிஞர் அண்ணா அவர்கள், கம்ப ரசம்-னு ஒரு தொடர் கட்டுரை எழுதினாரு! "கம்பனின் ஆபாச இலக்கியம்! கம்ப ரசம் டோஸ் நம்பர்-1, டோஸ் நம்பர்-10" ன்னு அவர் கொளுத்திப் போட்டதுல, அப்பவே சும்மாப் பிச்சிக்கிட்டுப் போச்சி! :)

மென்மையே உருவான தமிழ்த் தென்றல் திரு.வி.க,  மற்றும் டாக்டர் மு.வ,  டி.கே.சி போன்ற தமிழறிஞர்களும்,  இதர சமய அறிஞர்களும், அதற்கான உண்மையான விளக்கம் எல்லாம் தந்தாங்க!
ஆனா அவங்க சொன்னதெல்லாம் அப்போது எடுபட்டு இருக்குமா-ன்னு உங்களுக்கே தெரியும்! :)  கொளூத்திப் போட்டது போட்டது தான்!  இந்த நிகழ்வை, இப்போ நம்ம பதிவுலகப் பார்வையில் இருந்தும் ஒப்பிட்டுப் பார்த்து கொள்கிறேன்! :)


பெரும் பைம் புனத்தினுள் = பெரிய பசுமையான தினைப் புனத்தில்
சிற்றேனல் = சிறு + ஏனல்; ஏனல்-னா தினைக் கதிர்!
தினைக் கதிர் யாராச்சும் பார்த்து இருக்கீயளா? தினை மாவு யாராச்சும் சாப்பிட்டு இருக்கீயளா? இல்லீன்னா அதெல்லாம் கிராமத்து சமாச்சாரம்-ன்னு சாய்ஸ்-ல விட்டாச்சா?

தினையை ஆங்கிலத்தில் Millet-ன்னு சொல்லுவாங்க! இப்பல்லாம் கேழ்வரகு, கம்பைத் தான் பொதுவாத் தினை-ன்னு சொல்லிடறாங்க! ஆனா தினை என்பது கம்பிலேயே தனியாக ஒரு வகை!
குறிப்பாச் சொல்லணும்னா Foxtail Millet! பார்க்க நரியின் வால் போலவே பச்சைக் கதிர் தொங்கும்! இந்தியில் ஜோவர்-ன்னு சொல்லுவாய்ங்க! இப்பல்லாம் வட நாட்டுல இந்தத் தினை பிரபலம் ஆயிருச்சி! நாம தான் தினையை விட்டுட்டோம்! வடக்கு வாழ்கிறது! :)

பண்டைத் தமிழ் மக்களின் உணவு அரிசி இல்லை! தினை! அதுவும் குறிஞ்சி மற்றும் முல்லை நில மக்களின் உணவு.  மருதத்துல தான் பிற்பாடு அரிசி பிரபலம் அடைஞ்சிருக்கும் போல!
தினைப் புனத்துக்கு ரொம்ப தண்ணி எல்லாம் தேவைப்படாது. ஆனா மகசூல் ஜாஸ்தி! 
மேலும், தினை உணவு மிகவும் சத்தானது. அத்தனையும் ப்ரோட்டீன்.
இப்போதெல்லாம், காலையில் சீரியல்-ன்னு பாலை ஊத்தி, லபக் லபக்-ன்னு கோழி கணக்கா லபக்கறோமே! ஆனா அப்பவே தினை ஆகாரம் நம் வழக்கத்தில் இருந்து வந்தது!

தினை மாவுருண்டை செய்வது எப்படி?
தினை மாவை எண்ணெய் ஊத்தாம சிறு தீயில் வறுத்துக்கனும்! வாசனை அப்பவே கமகம-ன்னு தூக்கும்!
கூடத் தேன் சொட்டு சொட்டா விட்டுப் பிசைஞ்சிக்கிடனும்.
ஏலக்காய்த் தூளும், வெல்லமும் கூட சேர்த்துக்கலாம்!
அப்படியே மாவு போல உருட்டி, மாவிளக்காய் முருகனுக்குப் போட்டு, பின்னால சாப்புடலாம்! அம்புட்டுச் சுவை! அம்புட்டுச் சத்து!


காக்கின்ற பேதை = தினைப் புனத்தை காவல் காக்கும் வள்ளி.
கொங்கை விரும்பும் குமரனை = அவள் கொங்கையாகிய திருமார்பை விரும்பும் குமரக் கடவுள்.
மெய் அன்பினால் = உண்மையான (மெய்யான)  அன்பினால்
மெல்ல மெல்ல உள்ள = மெல்ல மெல்லச் சிந்தனை செய்ய

அரும்பும் தனி பரமானந்தம் = மனசுக்குள் ஒரு கந்தக் களிப்பு,  பூ மொட்டு விரிவது போல அரும்பும்!  அரும்பு எப்போ மூடி இருந்திச்சின்னும் தெரியாது, எப்போ படீர்-ன்னு விரிஞ்சதுன்னும் தெரியாது!  அது போல இந்தக் கந்தக் களிப்பூ!

தித்தித்தது அறிந்தவன்றோ = அந்தக் கந்த ருசியின் இனிமையை அறியும் போது...
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் என்று புனித விவிலியம் (பைபிள்) கூறும் அல்லவா! அதே தான் இங்கும்! கந்தன் இனிமையானவன் என்பதை ருசித்துப் பாருங்கள்! அப்போது...

கரும்பும் துவர்த்து செந்தேனும் புளித்து = கரும்பும் துவர்க்கும், தேனும் புளிக்கும்!
அற கைத்ததுவே = இவையெல்லாம் கசந்து போனதுவே! உன் எண்ணம் ஒன்றே தித்திப்பதுவே! உலகச் சுவை எல்லாம் அற, எனை இழந்த நலம், சொல்லாய் முருகா, சுர பூபதியே!
திருவரங்கத்து அமுதனார் நூற்றந்தாதியில் சொல்வது போலவே இதைத் தித்தித்து உண்ண வேண்டும்! - என்னை நீ வந்துற்ற பின், சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!

தினை மாவு தித்தித்ததுவே!
வள்ளியின் வடிவு தித்தித்ததுவே!
முருகனின் முருகு தித்தித்ததுவே!
அடியேற்கு இன்று தித்தித்ததுவே!


அடுத்த பாட்டு சிறப்பான தமிழோசைப் பாட்டு! அருணகிரி, அப்படியே அள்ளித் தெளிக்கிறார் சந்தத் தமிழை!

சளத்தில் பிணி பட்டு அசட்டு க்ரியைக்குள் தவிக்கும் என்றன்
உளத்தில் ப்ரமத்தை தவிர்ப்பாய் அவுணர் உரத்து உதிர
குளத்தில் குதித்தும் குளித்தும் களித்தும் குடித்தும் வெற்றிக்
களத்தில் செருக்கி கழுது ஆட வேல்தொட்ட காவலனே.

சளத்தில் = கள்ளத்தனமான ஆசையில்
பிணிபட்டு = கட்டுண்டு (பிணிக்கப்பட்டு)
அசட்டுக் க்ரியைக்குள் = மூடத்தனமான செய்கைகள் செய்கிறேன்
தவிக்கும் என்றன் உளத்தில் = தவிக்கின்ற அடியேன் மனதில்
ப்ரமத்தைத் தவிர்ப்பாய் = மயக்கத்தை ஒழிப்பாயாக!

கள்ளத்தனமான ஆசைகள் உள்ளதில் வளர்த்துக் கொள்வதால், தவிப்பு தான் ஏற்படுகிறது! அந்தத் தவிப்பைத் தவிர்க்க பரிகாரம், அது இது-ன்னு அசட்டுத்தனமான செய்கைகளைத் தான் இன்னும் செய்து கொண்டு இருக்கிறேன்!
என் பிரமத்தையும் மயக்கத்தையும் போக்குவாயாக! பிமரங் கெட மெய்ப் பொருள் பேசியவா-ன்னு கந்தர் அனுபூதியும் சொல்லும்!

அவுணர் உரத்து - அசுரர்களுடைய மார்பில
உதிரக் குளத்தில் = இரத்தக் களரியில்
குதித்துக் குளித்து = குதித்தும் குளித்தும்
களித்து குடித்து = மகிழ்ந்தும் குடித்தும்

வெற்றிக் களத்தில், செருக்கில் = போரில் வெற்றி பெற்று
கழுது ஆட = பேய்கள் எல்லாம் கூத்தாட
வேல் தொட்ட காவலனே = வேலைத் தொட்ட காவலா...

முருகன் வேலை விடக் கூட இல்லை! சும்மா தொட்டான்!  அவன் தொட்டதற்கே தொட்டனைத்தூறும் என் மனற் கேணி!
திருக்கையால் வேல் தொட்ட காவலா,
திருக்கையால் என்னையும் தொட்டுக் கொள்!
தினமும் என் சிந்தையில் உன்னை இட்டுக் கொள்!

அடுத்து செவ்வாய் சந்திப்போம்!  இப்போது செங்கோடனை வந்திப்போம்!

Monday, September 8, 2008

அலங்காரம்-05/06: முருகன் சூரனைக் கொன்றது சரியா? தவறா??

திகில் படங்களைப் பார்த்து இருக்கீங்க தானே? கொடுக்கும் சவுண்ட் எஃபெக்ட்டுலேயே, பாதி திகில் வந்து விடும்! நாகேஷ் கதை சொல்லும் போது கொடுக்கும் சவுண்ட்டில், பாலையா பயந்து போவாரே! என்ன படம்ங்க அது? அதே போல அருணகிரியும் சவுண்ட் எஃபெக்ட்டு கொடுக்கறாரு!

பாட்டு முழுதும் வல்லினம் தான்! உடல் சோரி, ரத்தம் கக்க, கூர கட்டாரி, இட்டு வெட்டு-ன்னு ஒரே திகில் தான்!
எதைக் கண்டு திகிலாம்? நம் ஐம்பொறி/ஐம்புலன்களைக் கண்டு தான்! வாங்க பார்க்கலாம்!

ஒட்டார்-னா என்னங்க? ஓட்டு போடறவங்க எல்லாம் ஓட்டார்! பதவிக்கு வந்த பின் ஓட்டார் எல்லாம் ஒட்டார் ஆகி விடுவர்! :)
ஒட்டார் = பகைவர்! ஒட்டாதவங்க! அன்புக்கும் பண்புக்கும் ஒட்டாதவங்க!
எவ்வளவு முயன்று ஒட்ட வைத்தாலும், பகை மனப்பான்மையை மனதில் உடையவர்கள், ஒட்டாமல் வெட்டிக்கிட்டு வருவாங்க!
* வள்ளுவரும் ஒட்டார்-ன்னு எங்கே சொல்றாரு? சொல்லுங்க பார்ப்போம்!

அவிங்களுக்கு, அன்புச் சொல் சொன்னா அது மனத்திலும் ஒட்டாது! அறிவுச் சொல் சொன்னா அது மதியிலும் ஒட்டாது! ஒட்டவே கூடாது என்று முடிவெடுத்து விட்டவனுக்கு எது தான் ஒட்டும்?
அதே போல, நம் ஐம்புலன்களும், நமக்கு ஒட்டார் ஆயிடுதுங்களாம்! இறைவனோடு ஒட்ட விடாமல், நம்மை வேறு எது எதோடவோ எல்லாம் ஒட்ட வைக்குதுங்களாம்!

என்ன செய்யலாம் இந்த ஒட்டாரை? வெட்டி வீழ்த்திடலாமா?
பகைவர்-ன்னா அவர்களைத் தயவு தாட்சண்ணியம் இல்லாம அழிக்கணும் தானே? அதே போல ஐம்புலப் பகைவர்களையும் அழித்து விடலாமா என்ன?
ஹிஹி!
* கண்ணை அழிச்சா, அதுக்கப்புறம் முருகனை எப்படிக் கண்ணாரக் கண்டு சேவிப்பதாம்?
* காதை அழிச்சா, அதுக்கப்புறம் திருப்புகழை எப்படிக் காதாரக் கேட்பதாம்?
* வாயை அழிச்சா, அதுக்கப்புறம் வயலூரானை எப்படி வண்டமிழால் பாடுவதாம்?
* மூக்கை அழிச்சா, அதுக்கப்புறம் அவன் திருநீற்றினை எப்படி முகர்வதாம்?
* உடலை அழிச்சா, அதுக்கப்புறம் திருத்தொண்டு என்னும் கைங்கர்யம் எப்படிச் செய்வதாம்?

ஆக, ஒட்டாரை, நம் வழிக்குக் கொண்டு வரும் வழி என்ன? = அழிப்பது அல்ல! ஆட்கொள்ளுதல்!

சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே என்று ஆண்டவன் சீற்றமும் அருளின் பாற்பட்டதாகவே இருக்கும் என்பது ஆண்டாள் வாக்கு!
முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பான் என்று முருகனும் தன் மாமியின் வாக்கையே வழி மொழிகிறான்!



அலங்காரம்-05!

ஓர ஒட்டார் ஒன்றை! உன்ன ஒட்டார்! மலர் இட்டு உன் தாள்
சேர ஒட்டார் ஐவர்! செய்வது என் யான்? சென்று தேவர் உய்ய,
சோர நிட்டூரனை, சூரனை, கார் உடல் சோரி கக்க,
கூர கட்டாரி இட்டு, ஓர் இமைப் போதினில் கொன்றவனே.


ஐவர் = கண், மூக்கு, செவி, வாய், மெய் = ஐம்பொறிகள்
இவர்கள் செய்வது என்ன?

ஓர ஒட்டார் ஒன்றை! = ஆராய விட மாட்டார்கள் ஒன்றை! (ஒர்தல்=ஆராய்தல்; ஓர்மையுண்டோ என்று மலையாளத்தில் கேட்பது தான்)
உன்ன ஒட்டார் = சிந்திக்க விட மாட்டார்கள்!
மலர் இட்டு உன் தாள் சேர ஒட்டார் = மலர் தூவி, உன் திருவடிகளைச் சேரவும் விட மாட்டார்கள்!
செய்வது என் யான்? = நான் என்ன செய்வேன்? ஐயகோ!

சென்று தேவர் உய்ய = தேவர்கள் பிழைக்கும் பொருட்டு
சோர நிட்டூரனை, சூரனை = வஞ்சனை-கொடுமை மனம் கொண்ட சூரனை
கார் உடல் = கரிய உடலில் இருந்து
சோரி கக்க = இரத்தம் கக்க
கூர கட்டாரி இட்டு = கூர்மையான வேலைச் செலுத்தி.
ஓர் இமைப் பொழுதினில் கொன்றவனே = ஒரு நொடியில் கொன்றவனே!

தாராகாசுர வதம்

சிங்கமுகன் வதம்

சூர சங்காரம்



வாங்க, பாட்டைப் பிரிச்சி மேயலாமா?

சென்று தேவர் உய்ய = தேவர்களுக்கு மட்டுமே ஏன் முருகன் உதவி செய்ய வேண்டும்? அசுரர்களுக்கு முருகன் உதவி செய்துள்ளானா? * தெரிந்தவர் சொல்லுங்கள் பார்ப்போம்!

கார் உடல் சோரி கக்க, கூர கட்டாரி இட்டு = சூரன் செய்த தவறு என்ன? அவனை ஏன் இரத்தம் கக்க, கட்டாரி இட்டு வெட்ட வேண்டும்?
இத்தனைக்கும் அவன் மாற்றான் மனைவியைக் கூட களவாடவில்லை!
பெண்டிரை வன்கொடுமை செய்யவில்லை!
முனிவர்களுக்கும் மானிடர்க்கும் தீங்கு இழைக்கவில்லை!
தன்னையே கடவுளாகக் கும்பிட வேண்டும் என்று யாரையும் கட்டாயமும் படுத்தவில்லை!

தேவர்களை மட்டும் போரிலே வென்று, சிறைப்பிடித்து வைத்தான் - இது வீரம்! பின்னர் எதற்கு இந்தச் சூர சங்காரம்? - * இதையும் தெரிந்தவர் சொல்லுங்கள் பார்ப்போம்!

ஓர் இமைப் போதினில் கொன்றவனே = சூரனையும் அவன் சுற்றத்தையும் முருகப் பெருமான் அழித்தார்! இமைப் பொழுதில் கொன்றார்! ஆனால் இதைக் கொலையாகக் கருத மாட்டார்கள் முருக அன்பர்கள்! ஏன்? ஏன்? ஏன்?

மும்மலம் = மூன்று அழுக்குகள் = ஆணவம், கன்மம், மாயை!
சூரன் = ஆணவம்;
சிங்கமுகன் = கன்மம்;
தாரகாசுரன் = மாயை!


இந்த மூன்றும் அழிந்தால், பசு பதியிடம் சேரும்! உயிர் இறைவனிடம் சேரும்! அப்படிச் சேர்பித்தான் முருகப் பெருமான்!
சூரனை வதைத்த பின்னரும், மயிலும் சேவலுமாய்ச் சேர்த்துக் கொண்டான்!
ஆக, ஒட்டாரை நம் வழிக்குக் கொண்டு வரும் வழி என்ன? = அழிப்பது இல்லை! ஆட்கொள்ளுதல்!

அதே போல நம் ஐம்புலப் பகைவர்களையும் அழித்து விடாமல், ஆட்கொள்ள வேண்டும்! ஐம்புலனை அழித்தி விட்டால் இறை நுகர்ச்சி ஏது? எனவே ஐம்புலன்களை நல்லது நோக்கித் திருப்பி விட வேண்டும்!
இந்திரிய நிக்ரஹம் என்பார்கள்! நிக்ரஹம் என்றால் அழித்தல் என்று பொருளில்லை! நி+கிரஹம் = இல்லை+இடம்! இடங்கொடுக்காமல் இருப்பது! துஷ்ட நிக்ரஹமும் அதே தான்! துட்டர்களுக்கு இடம் கொடாமல் அவர்களை அடக்கி ஆள்வது!

பெரிய பெரிய சூரனை எல்லாம் அடக்கியவன் நீ! என் ஐம்புலன்களையும் அடக்கக் கூடாதா முருகா? - என்று ஏக்கமாகக் கேட்கிறார் அருணகிரியார்!


அலங்காரம்-06!

திருந்தப் புவனங்கள் ஈன்ற பொன் பாவை, திருமுலைப்பால்
அருந்திச், சரவண பூந்தொட்டில் ஏறி, அறுவர் கொங்கை
விரும்பிக், கடல் அழ, குன்று அழ, சூர் அழ, விம்மி அழும்,
குருந்தைக் குறிஞ்சி கிழவன் என்று ஓதும் குவலயமே.

திருந்தப் புவனங்கள் ஈன்ற பொன் பாவை = திருத்தமாய் உலகு ஏழும் ஈன்ற பொன் மகள், அன்னை பார்வதி, புவனேஸ்வரி!
திருமுலைப் பால் அருந்தி = அவள் திரு மார்பில் சுரக்கும் பாலைப் பருகி
சரவணப் பூந்தொட்டில் ஏறி = சரவணம் என்னும் பொய்கையில் தோன்றி
அறுவர் கொங்கை விரும்பி = கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரின் முலைப்பாலை விரும்பி

கடல் அழ = கடலாய் மாறிய அசுரன் அழ,
(சூரன் கடலாய் மாறி நிற்க, கடலை வற்ற வைத்தார் முருகப் பெருமான்; அலை வேலை அஞ்ச, வடி வேல் எறிந்த அதி தீரா என்பது திருப்புகழ்)
குன்று அழ = குன்றாய் மாறிய அசுரன் அழ,
(கிரெளஞ்ச மலையாய் மாறி நின்றான் தாருகன். மலைக்குள் அமரரையும் சேர்த்தே விழுங்கினான்; மலைமாவு சிந்த என்றும் அதே திருப்புகழில் வரும்)
சூர் அழ = சூரன் அழ,

விம்மி அழும் குருந்தை = விம்மி அழுகின்ற குழந்தை!
நாளை இவர்களை எல்லாம் அழ வைக்கப் போகும் குழந்தை! அதுவே இன்று இப்படி அழுகிறதே! இது என்ன அதிசயம்!

குறிஞ்சி கிழவன் என்று ஓதும் குவலயமே = கிழவன்=உரிமை உடையவன்! குறிஞ்சி நிலத்துக்கு உரிமை உடையவன் என்று தமிழுலகமே தொழும் ஒரு குழந்தை - முருகக் குழந்தை!
ச்சே, குறிஞ்சிக் குழந்தையைப் போயி குறிஞ்சிக் கிழவன்-னு சொல்லுறாங்களே! இந்தப் புலவர்களுக்கும், கவிஞர்களுக்கும், மக்களுக்கும் பித்து பிடித்து விட்டதா என்ன? - என்று நகைச்சுவையாய் நகைச்சு வைக்கிறார் அருணகிரிப் பெருமான்!

அடுத்த செவ்வாயில் அடுத்த செவ்வாழைகளைச் சுவைப்போம்!
அகங்காரங்கள் தீர, அலங்காரங்கள் தொடரும்!

Monday, August 25, 2008

அலங்காரம்-03/04: கழுத்தில் சுருக்கு! கந்தவேள் முறுக்கு!

"சாகிற நேரத்தில் சங்கரா சங்கரான்னு கூவி என்ன பயன்? அதெல்லாம் முன்னாடியே உணர்ந்து இருக்கணும்" என்று ஒரு சிலர் சொல்லுவார்கள்!
"இல்லை இல்லை! உயிர் போகும் வேளையில், அறியாமலே கூட இறைவன் பேரைச் சொன்னால் மோட்சம் உண்டு! அஜாமிளன் கதை படிச்சதில்லீங்களா?" என்பது இன்னொரு சாரார் கருத்து! - எது உண்மை?

பண்ணுற பாவம் எல்லாம் பண்ணிட்டு, இறுதி வேளையில், பெத்த பையன் நாராயணனைப் பார்த்து, "டேய் நாராயணா"-ன்னு கூவிட்டா மோட்சம் தான்! சந்தேகம் இல்லை!
ஷார்ட்கட்! பைபாஸ் சாலையில் போயிடலாம் என்று சில கணக்குப் புலிகள் திட்டம் போடலாம்!

ஆனா "நாராயணா"-ன்னு முப்பது வினாடிக்கு முன்னால் சொல்லிட்டு, சரியாக "அந்தத்" தருணத்தில்,
"ஃபேனைப் போடச் சொன்னா, கம்முன்னு இருக்கியே! உன்னைப் போயி புள்ளையாப் பெத்தேனே! பாவீ---"

முப்பது வினாடிகளுக்கு முன் "நாராயணா"! ஆனால் "அந்த" விநாடியில் "பாவி"!
ஹா ஹா ஹா! "அந்த" வினாடி நம் கையில இல்லியே! அப்போ கணக்குப் புலிகள் என்ன செய்ய முடியும்?
அருணகிரிப் பெருமான் இந்தக் கணக்குப் புலிகளை எல்லாம் அடித்து நொறுக்குகிறார்! பார்க்கலாம் வாங்க அலங்காரம்-03!



இந்த அலங்காரப் பாடலில் தமிழுக்கே உரிய ழ-கரம் 7 முறை, ற-கரம் 13 முறை வந்துள்ளன. எண்ணிப் பாருங்க! :)


(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

அழித்துப் பிறக்க ஒட்டா, அயில் வேலன் கவியை, அன்பால்
எழுத்துப் பிழை அறக் கற்கின்றிலீர்! எரி மூண்டது என்ன,
விழித்துப் புகை எழ பொங்கும், வெம் கூற்றன் விடும் கயிற்றாற்,
கழுத்திற் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ, கவி கற்கின்றதே?

பாசங்களை அறுத்து, மீண்டும் பிறக்க ஒட்டாதவன் அயில் வேலவன்!
அவன் கவிதையை, (தலை) எழுத்துப் பிழைகள் அறுமாறு, கற்க மாட்டீங்களோ?
தீப்பொறி பறக்க, புகை எழ, சினத்துடன் வரும் யமன், கயிறு வீசப் போகிறான்!
அப்படிச் சுருக்கு மாட்டும் போதா, சுப்ரமண்யா என்று ஓதத் தொடங்கப் போகிறீர்கள்? ஹா ஹா ஹா!


கொஞ்சம் பிரிச்சி மேயலாமா?
அதுக்கு முன்னாடி நண்பர் குமரனின் இந்த இடுகையையும் ஒரு வாசிப்பு வாசித்து விடுங்கள்! பஜ கோவிந்தம் பாடலின் ஆரம்ப வரிகளில், இதே கருத்தை மிளிர்விக்கிறார் ஆதிசங்கரர்!
***அயில் வேல்-னு கந்த சஷ்டிக் கவசத்தில் எங்கு வரும்? அதையும் சொல்லுங்க பார்ப்போம்!

அழித்துப் பிறக்க ஒட்டா = பாசங்களை அழித்துப் பிறவிச் சுழலை முடித்து வைப்பவன் முருகப் பெருமான்!
பசு-பாசம்-பதி! மொத்தம் மூனு கோடுகள்! விபூதி என்னும் திருநீற்றிலும் மூனு கோடுகள்!


பசுக்களுக்கும் பதிக்கும் தடையாக நிற்பது பாசம்! அந்தப் பாசத்தை அழித்து, பதியிடம் சேர்ப்பவன் முருகன்! அவன் கையில் அயில் வேல்! அயில்=கூர்மை/உறுதி!
எதற்கு அயில்வேல்? பாசக் கயிறு வீசப் போறாங்க! அதுக்கு எதிரான ஆயுதம் தான் அயில் வேல்!

அன்பால், எழுத்துப் பிழை அறக் கற்கின்றிலீர்! = பிரம்மா என் தலை எழுத்தை எழுதும் போது மட்டும் தூங்கிட்டான் போல-ன்னு சில சமயம் நகைச்சு வைப்போம் அல்லவா? - அந்த எழுத்துப் பிழை எப்படி அறும்? அன்பால் மட்டுமே அறும்! அன்பைப் பிழையின்றிக் கற்றால், பிழை போகும்!
அட, அன்பை எப்படிங்க கற்க முடியும்? அது தானா வரணும்! இது கூடவாத் தெரியாது அருணகிருக்கு? கற்கின்றிலீர்-ன்னு சொல்றாரே?

உம்...நல்ல கேள்வி தான்! அருணகிரி சும்மா இலக்கணமா, எகனை மொகனையாச் சொல்லிட்டாரு போல! :)
கல்வி எப்படி வரும்? கல்வியே, வா-ன்னா வந்துருமா? மெனக்கெடணும்! நாம விரும்பிக் கற்றால் தான், கல்வி வரும் இல்லையா? கல்வி நல்ல விஷயம் தானே? அது தானே வராதா-ன்னா, வராது! நாம தான் அதைக் கற்கணும்!

அதே போல அன்பும் நாம கொடுத்தாத் தான் வரும்! தானா வராது! அன்பைக் கொடுக்கக் "கற்றுக்" கொள்ளணும்! அதான் அன்பைக் கற்கின்றிலீர்-னு சொல்றாரு அருணகிரி! இப்ப ஓக்கேவா? :)


இப்படி, அயில் வேலவன் மேல் வைக்கும் அன்பால், தலை எழுத்துப் பிழைகள் அறும்! கால்பட்டு அழிந்தது, இங்கென் தலைமேல், அயன் கையெழுத்தே, என்று இன்னொரு பாட்டிலும் சொல்லுவாரு அருணகிரி! அந்தக் கந்தர் அலங்காரம் பின்னால் வரும்! ***இப்போதைக்கு அந்தப் பாட்டை மட்டும் பின்னூட்டதில் யாராச்சும் சொல்லுங்க!
எரி மூண்டது என்ன, விழித்துப் புகை எழ பொங்கும், வெம் கூற்றன் விடும் கயிற்றால் =
வராரு மகராசன்! கூற்றுவன்! கயிறு வீசப் போறாரு! சரி, கூற்றுவன்-னு ஏன் பேரு? கூற்று=உறுதியாகக் கூறுதல்! கிட்டத்தட்ட கல் மேல் எழுத்து போல், உறுதியாகக் கூறுதல்! பாவ, புண்ணிய பட்டியல்களை எல்லாம் சாசனம் போல் உறுதிபட தீர்ப்பு கூறுவதால் கூற்றுவன்!

கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ, கவி கற்கின்றதே? = அவன் கழுத்தில் சுருக்கிடும் போது, "மிஸ்டர் எமதர்மன், ஒக்க நிமிட் வெயிட் மாடி! நான் எழுத்துப் பிழையை மாத்தப் போறேன்! நான் அயில்வேல் மேல் அன்பு செலுத்தப் போறேன்!"-ன்னு சொல்லத் தான் உங்களால் முடியுமா? அப்போது வாய் வருமா?
ஹா ஹா ஹா! எல்லாம் அப்புறம் கடைசியில் ரிட்டையர் ஆன பின்னால பார்த்துக்கிடலாம்; இப்போ என்சாய் மாடுவோம் என்று மட்டும் இருக்க வேண்டியதில்லை! ஒரே நேரத்தில் என்சாயும் மாடலாம்! எம்பெருமானையும் நாடலாம்!

அந்த Fixed Deposit கூட ஒருகால் உங்களுக்குக் கிட்டாமல் போக வாய்ப்புண்டு! ஆனால்...
கந்த Fixed Deposit என்னும் வைப்பு நிதி! அது வைத்த-மா-நிதி! உங்கள் தனிப் பெருஞ் சொத்து! அதற்கு...
அப்போதைக்கு இப்போதே சொல்லி வையுங்கள்!
அவன் திருப்புகழை இப்போதே ஓதி வையுங்கள்!



அலங்காரம்-04!


தேரணி இட்டுப் புரம் எரித்தான், மகன் செங்கையில் வேல்
கூரணி இட்டு, அணுவாகிக், கிரௌஞ்சம் குலைந்து, அரக்கர்
நேரணி இட்டு, வளைந்த கடகம் நெளிந்தது! - சூர்
பேரணி கெட்டது, தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே!


தேரணி இட்டுப் புரம் எரித்தான் = எல்லாத் தேவர்களையும் ஒரே தேரில் பல பாகங்களாக நிறுத்தி முப்புரம் எரித்தான் ஈசன்!
மகன் செங் கையில் வேல் கூரணி இட்டு = அவன் மகன் குமரவேள் கையிலே வேல்! அது கூர்+அணியாக இருக்கு! எதற்கு கூராக இருக்கு?

அணுவாகி = அணுவைப் பிளப்பது போல்; கிரௌஞ்சம் குலைந்து = கிரௌஞ்ச மலையைக் குலைத்தது! அது தாராகாசுரன் என்னும் மாய மலை!
அரக்கர் நேர் அணியிட்டு வளைந்த கடகம் நெளிந்தது = அரக்கர்களின் நேராக அமைக்கப்பட்ட படை(கடகம்) வளைந்து போனது! மலை குலைந்தது! அதனால் நிலை குலைந்தது!

சூர் பேரணி கெட்டது = சூரனின் பேரணி கெட்டது! தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே = இந்திர லோகம் பிழைத்ததுவே!
சூரனின் தம்பி தாராகாசுரன் மாயையில் வல்லவன்! யானை முகத்தவன்! அவன் கிரெளஞ்ச மலையாகி நின்று அனைவரையும் மலைக்குள் விழுங்கி விட, கூரணி வேல் அவனைத் துளைத்தது! போரில் அவன் தான் முதல் பலி! அவன் ஆட்டம் கண்ட பின், அனைத்துமே ஆட்டம் கண்டு, சூரன் ஆணவத்தால் அழிந்தான்! தேவேந்திரன் பணிவினால் வாழ்வு பெற்றான்!


அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்பார்கள் ஆழ்வார்கள்! அப்படிச் சொல்லி வைத்தால், இயல்பாகவே இறைவனின் நாமம், நாவில் ஒட்டிக் கொள்ளும்! செயற்கையாக வலிந்து வரவழைத்துக் கொள்ளத் தேவை இருக்காது!
அதனால் தான் அருணகிரியார், கடைசிக் காலத்திலா இதையெல்லாம் கற்கப் போகிறீர்கள்-ன்னு கேக்குறாரு! எல்லாம் சரி தான்!

ஆனால் உயிர் பிரியும் வேளையில் இறைவன் நினைப்பு வரவேண்டுமா என்ன? அந்திம காலத்தில் பகவத் நாம ஸ்மரணம் கூடத் தேவையில்லை என்பது ஒரு சித்தாந்தம்! அதை இன்னொரு நாள் மாதவிப் பந்தலில் பார்ப்போம்! அலங்காரம் அடுத்து செவ்வாய் தொடரும்!

Monday, August 11, 2008

அலங்காரம்-02: சேற்றில் சிக்க வைத்தான் முருகன்?

அலங்காரம் பண்ணனும்-னா முதல் கண்டிஷன் என்னாங்க? உங்களுக்கு ஒருத்தர் ஒப்பனை செய்கிறார்-னு வச்சுக்குங்களேன்! அவர் அழுக்கு ஆடைகளுடன், குளிக்காமல், தூய்மை இல்லாமல், அழகு உணர்ச்சியே இல்லாமல், உங்களுக்கு அலங்காரம் செய்ய முன் வந்தால் எப்படி இருக்கும்? :)

ஒருத்தரை அலங்காரம் செய்யும் முன்னர், நம்மை நாமே குறைந்தபட்ச அலங்காரம் செஞ்சிக்கணும்!
சேறு பூசிய சட்டையுடன் போய், ஒருவருக்குச் சந்தனம் பூச முடியுங்களா?

இது கந்தர் அலங்காரம்!
கந்தனுக்கு அலங்காரம் செய்யும் முன்னர், நமக்குன்னு சில அலங்காரங்களைச் செஞ்சிக்கிடணும்!

என்ன அலங்காரம்? = பணிவலங்காரம்!!!

பணிவு என்பது மிகவும் உயர்ந்த அலங்காரம்!
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
- என்கிறார் ஐயன்!
பணிவையே ஆபரணமாகக் கொண்ட பெண்கள், அலங்காரமாக ஜொலிப்பதை இசையரசி எம்.எஸ் அம்மா, அன்னை தெரேசா போன்றவர்களின் உருவில் கண்டுள்ளோமே!

பணிவு அலங்காரம் எப்படி வரும்?
தன் நிலையை அறிந்தால் தானே பணிவு வரும்! தன்னால் தனியாக எதையும் செய்ய முடியாது! மொத்த உலகமே கூட்டு முயற்சியாலும், இறைவன் அருளாலும் தான் இயங்குகிறது! இதில் நம் சொந்த டாம்பீகம் எங்கு வந்தது?

அம்மா-அப்பா சம்பாதித்து வைத்தது நம் கல்வி! அதனால் இன்று பணம்!
அம்மா-அப்பா சம்பாதித்து வைத்தது நம் புண்ணியம்! அதனால் இன்று கண்ணியம்!

இப்படி பேறும், தவமும் நாம் தேடி வந்தது அல்ல! நம்மைத் தேடி வந்தது! = இப்படி எண்ணிப் பார்த்தால் பணிவலங்காரம் தானே அமையும்!
அருணகிரியும், பணிவால் தம்மை முதலில் அலங்காரம் செய்து கொண்டு, பின்னர் தான் கந்தர் அலங்காரம் செய்கிறார்!

பேறும் தவமும் ஒன்னுமே நான் செய்யலை! இருந்தாலும் என்னையும் தேடி வந்து அருள் செய்தவா! - என்று பணிவுடன் தன் அலங்காரத்தைத் துவக்குகிறார்! பாட்டைப் பார்க்கலாமா?




(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை, ப்ரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழி விட்டவா, செஞ் சடா அடவி மேல்
ஆற்றைப் பணியை இதழியை தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான், குமாரன் கிருபாகரனே!


எளிமையான பொருள்:
பேறு, தவம் ரெண்டுமே இல்லாத அடியேனை,
வாழ்க்கையில் வந்து ஒட்டிக் கொண்ட சேற்றை எல்லாம் கழுவி என்னை மீட்டவா! சடாமுடியில் கங்கையாறு, நாகம், கொன்றைப்பூ, தும்பைப்பூ, பிறைச்சந்திரன் என்று ஐந்தும் சூடியுள்ளான் ஐந்தெழுத்தான்!
அந்தச் சிவபெருமானின் குமாரனே, குமரனே! உன் கிருபையால் தான் அடியேனுக்கு உய்வு!


கொஞ்சம் பிரிச்சி மேயலாம்!
(SK ஐயா இஷ்டைலில், பின் பார்த்து, முன் பார்ப்போமா? பதுங்கி விட்டுப் பாய்வோம் :)

செஞ் சடா அடவி மேல் = என்ன ஒரு உருவகம் பாருங்கள்! சிவபெருமானின் ஜடாமுடி அடவியாம்! அடவி=காடு!
அவர் ஜடா முடி, காடு போல் அடர்ந்து இருக்கு! மறைக்காடு ஈசனுக்கு மயிர்க் காடு!

அந்தக் காட்டில் என்னென்ன எல்லாம் இருக்கு? ஓடும் காட்டாறு இருக்கு! அதில் இளைய நிலா பொழிகிறது! கொன்றை/தும்பைப் பூக்கள் எல்லாம் பூத்துக் குலுங்கி ஆற்றில் தவழ்கின்றன! ஆறு போலவே வளைந்து வளைந்து நாகங்களும் சடைக் காட்டில் உலாவுகின்றன! எப்படி இருக்கு கானகக் காட்சி?

1.ஆற்றை = கங்கையை
2. பணியை = பாம்பை
3. இதழியை = கொன்றைப் பூவை
4. தும்பையை = தும்பைப் பூவை
5. அம்புலியின் கீற்றை = சந்திரனின் பிறையை
புனைந்த பெருமான் = அணிந்த சிவ பெருமான்

சிவபெருமான் ஐந்து எழுத்துக்காரன் அல்லவா? அவன் ஜடா முடியிலும் ஐந்து அலங்காரங்களைச் சூடி உள்ளான்!
கொன்றைப் பூ = மஞ்சள் நிறம்! கொத்து கொத்தாப் பூக்கும்! தொலைவில் இருந்து பார்க்க ஏதோ நெருப்புக் கொத்து போலத் தென்படும்!

தும்பைப் பூ = வெள்ளை நிறம்! பார்க்க சங்கு போல இருக்கும்! பரிசுத்தமான வெள்ளை! மென்மையானதும் கூட! வீட்டில் சுடும் இட்லி தும்பைப்பூ போல இருக்குன்னு சொல்வாங்க தானே?

இப்படி எல்லாமே வெண்மை/குளிர்ச்சி பொருந்திய பொருட்கள் தான் சிவபெருமானுக்கு!
ஈசன் வெப்பம் மிகுந்தவன் = அதனால் குளிர்ச்சி தரும் கொன்றை, தும்பை மலர்கள்!
பெருமாள் குளிர்ச்சி மிகுந்தவன் = அதனால் சூடு தரும் துளசி மலர்கள்!

இப்படி தலையில் இருந்து பாதம் வரை, வெள்ளலங்காரம் செய்து கொண்டுள்ள ஈசன்...
குமரன் கிருபாகரனே = அந்த ஈசனின் குமரன், மிகவும் கிருபை உள்ளவன்! கிருபா-ஆனந்த-வாரி = கருணை ஆனந்தக் கடல்!
எப்படி என்ன பெருசா கருணை காட்டிட்டான்பா ஈசனின் குமரன்?


பேற்றை தவம் சற்றும் இல்லாத என்னை=
பேறு = தானா அமையும்! தவம் = நாம செய்யணும்!
ஒன்னு பூர்வீகச் சொத்து! இன்னொன்னு சுய சம்பாத்தியம்!
நற்பேறு = இது முன் செய்த பாவ புண்ணியங்களால் பெறுவது! பெறுவதால் தான் அதுக்குப் பேரே பேறு!
தவம் = இது இப்போது நாம் செய்யும் நல் வினைகள்!

பூர்விகச் சொத்து வானத்தில் இருந்து தானா குதிக்காதே! அதையும் யாராவது ஒருத்தர் சம்பாதிச்சி தானே வைக்கணும்?
நேற்று அம்மா-அப்பா செஞ்ச புண்ணியம், இன்று நமக்கு நற்பேறு!
இன்று நாம செய்யும் தவம், நாளை நம்முடைய மக்களுக்கு நற்பேறு!


சரி, தவம்-ன்னு எதுக்குச் சொல்வானேன்? காட்டுல போயி தவம் செஞ்சா தான் நற்பேறு கிடைக்குமா என்ன? அப்படின்னா யாருமே தவம் செய்ய மாட்டோமே! காட்டுக்குப் போயி தவம் செஞ்சா, அப்பறம் எப்படி பதிவு போடறது? ஜிமெயில் செக் பண்ணுறது? நண்பர்களுடன் ஜி-டாக்குவது?

தவம்-ன்னா ஒழுக்கம்! தவ வாழ்க்கை-ன்னா ஒழுகி வாழ்வது! தவப் புதல்வன்-னா ஒழுக்கமான புதல்வன்!
அல்லவை தேய, நல்லவை செய்தல் = அது தான் தவம்!

மனதால் கெடுதி நினைக்காது, தன்னால் முடிஞ்ச நல்லவை செய்தாலே அது தவம் தான்!
செய்யாதன செய்யோம்! தீக்குறளை சென்று ஓதோம்! ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி, உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்தேலோ ரெம்பாவாய்!

உண்டியலில் பணம் போட்டு விட்டு, கோயிலில் உட்கார்ந்து, "அவன் யோக்கியமா? இவ யோக்கியமா" என்று ஒரு சிலர் புறம் பேச...
பணமில்லாது போனாலும், கிடைத்த பிரசாத உணவை, கிடைக்காதவருடன் பகிர்ந்து கொள்ளுதலும் ஒரு தவம் தான்!

இளமையில் தீய வழிகளில் ஈடுபட்டவர் தான் அருணகிரி்! அடுத்த சில பதிவுகளில் சில கதைகளைப் பார்ப்போம்! நோயுற்ற போது, கன்னிகள் கிடைக்காமல், கன்னிப் போனவர்!
இறுதியில் சொந்த அக்காவே, "உனக்குப் பெண் தானே வேண்டும்? இதோ, நான் இருக்கிறேன்!" என்று மனமுடைந்து சொல்ல, இதயம் வெடித்துப் போய் மாறினார்!
அவர் தவம் செய்யவில்லை என்றாலும், அவர் பெற்றோரும் தமக்கையும் செய்த தவம், அவருக்குப் பேறாக அமைந்து ஆட்கொண்டது!



ப்ரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா=
எப்படிச் சொல்றாரு பாருங்க! சேற்றைக் கழிய-ன்னும் போது அப்படியே சேறு ஒழுகறது தெரியல? சேறோடு எவ்வளவு நேரம் அப்படியே இருப்பீங்க? யோசிச்சிப் பாருங்க! உடனே கழுவிக் கொள்ளணும்-னு தோனும் அல்லவா?
ஆனால் பிரபஞ்சம், பிறவி என்னும் சேற்றை கழுவிக் கொள்ள மட்டும் மனசுக்கு தோனுவதே இல்லையாம்! அதான் விசித்திரம்! வியப்பு!

பிறக்கும் போதே தாயின் வயிற்றில் உள்ள சேற்றில் மிதக்கிறோம்! வெளி வந்து செய்யும் கர்ம வினைகள் எல்லாம், உடனே சேற்றைப் போல் நம் மீது ஒட்டிக் கொள்கிறது!
ஏதோ கொஞ்சமாகக் கழுவிக் கொண்டாலும், கறை அவ்வளவு சுலபமாகப் போக மாட்டேங்குது! உஜாலா, சர்ஃப் எக்செல் எதுவும் வேலைக்காவது!

இப்படிப் பிறவிச் சேற்றில் சிக்க வைத்தானா முருகன்? இல்லையில்லை! கருணை என்னும் கங்கையை நம் மேல் பாய்ச்சி, நம் சேற்றைக் கழுவுபவன் தான் முருகன்! சேற்றைக் கழிய வழி விட்டவா!
சேற்றைக் கழுவிய பின், தூய்மை வந்து விட்டது! வழி பிறந்து விட்டது!
இனி என்ன? ஒவ்வொன்றாய் அலங்காரம் தான்!
நமக்கும் அலங்காரம், கந்தனுக்கும் அலங்காரம்!!


அடுத்த செவ்வாய்க்கிழமை சந்திப்பு-ஓம்!
இப்போ முருகா என்று வந்திப்பு-ஓம்!
ஓம்!

Monday, July 28, 2008

தலையில பிள்ளையார் குட்டு குட்டிக்கறாங்களே! - ஏன்?

அருணகிரிப் பெருமானின் கந்தர் அலங்காரம் இதோ தொடங்கி விட்டோம்! மொத்தம் 108 தமிழ்ப் பூக்கள்! ஒவ்வொன்றாய்க் கொய்து, ஒவ்வொரு விதமாய்த் தொடுத்து, தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு அலங்காரம் செய்யப் போகிறோம்!
நமக்குச் செய்து கொண்டால் "அகங்காரம்"! இறைவனுக்குச் செய்து கொண்டால் "அலங்காரம்"!

மை இட்டு எழுதோம்! மலரிட்டு நாம் முடியோம்! = என்று தன்னை அலங்காரம் செய்து கொள்ள மாட்டாளாம் பெண்ணொருத்தி!
தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க = என்று அவனுக்கு அலங்காரம் செய்து பார்க்கிறாள்!
இப்படி அவனுக்கு அலங்காரங்கள் செய்தால், நம் அகங்காரங்கள் அழியும்! - தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்!

(அழகு கொஞ்சும் முருகப் பெருமான் - வள்ளி சற்றே எட்டிப் பார்க்க - எந்த ஆலயம்-னு தெரிகிறதா?)

ஒரு குழந்தை-ன்னு நம் வீட்டில் வந்து விடுகிறது! அப்போ என்ன நடக்கிறது?
நாம் மின்னி மினுக்கி வந்த காலமெல்லாம் போய், நம் கவனமெல்லாம் அந்தக் குழந்தையை அனுபவிப்பதில் அல்லவா போகிறது?
கண்ணாடி முன் கால் மணி நேரம் நின்றவன், இன்று பாப்பாவின்
முன்னாடி அல்லவா மூனு மணி நேரம் நிற்கிறான்?

* அலங்காரங்கள் எல்லாம் குழந்தைக்குச் செய்யத் துவங்கி விடுகிறோம் அல்லவா?
* "நாம்" என்ற எண்ணம் போய், "நமது" என்ற எண்ணம் வருகிறது அல்லவா?
* அகங்காரம் போய், அலங்காரம் ஆகிறது அல்லவா?
* அதுவே அலங்காரம்! இறை அலங்காரம்! கந்தர் அலங்காரம்!
பழனிமலையில் எத்தனை அலங்காரம் அந்தக் குழந்தைக்கு?
* விடியற் காலை 6:00=விஸ்வரூப அலங்காரம் (இயற்கையான ஆண்டி உருவம்)
* விழவுப் பூசையில் 7:00 = சாது சன்னியாசி அலங்காரம் (காவி உடையில்)
* சிறுகாலைச் சாந்தியில் 8:00= பால முருகன் அலங்காரம் (குழந்தையாகத் தோற்றம்)
* பெருகாலைச் சாந்தியில் 9:00= வேட்டுவர் அலங்காரம் (வேடன கையில் வில்லுடன்)
* உச்சி காலத்தில் 12:00= வைதீக அலங்காரம் (வேதம் ஓதும் அந்தணர்)
* சாய ரட்சையில் 6:00= ராஜ அலங்காரம் (அரச உடையில்)
* அர்த்த சாமத்தில் 8:00= விருத்த அலங்காரம் (முதிய உருவம்)


முதல் பாட்டுக்குப் போகலாமா?

திருவண்ணாமலையைப் பேரிலேயே வைத்துக் கொண்ட அருணகிரிக்கும், மலைக்கும் பூர்வ ஜென்ம பந்தம் போலும்! அதனால் தான் கந்தர் அலங்காரமும், திருவண்ணாமலை பிள்ளையார் கோயிலிலேயே துவங்குகிறது!

கோபுரத்து இளையனார் சன்னிதியில் முருகன்!
அவன் அருகில் வன்னி மரத்து விநாயகர் சன்னிதி!
அருகே ஆயிரங்கால் மண்டபமும், பாதாள லிங்கமும்!
இதோ முதல் பாடல், காப்புச் செய்யுள்! கணபதியானுக்கு!

அடல் அருணைத் திருக் கோபுரத்தே அதன் வாயிலுக்கு
வட அருகிற் சென்று கண்டு கொண்டேன்; வருவார் தலையில்
தட-பட எனப் படு குட்டுடன், சர்க்கரை மொக்கிய கை
கட-தட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே!


இதாங்க எளிமையான பொருள்: வருபவர்கள் எல்லம் தடக்-படக் என்று தலையில் குட்டிக் கொள்கிறார்கள்!
அவர்கள் படைக்கும் சர்க்கரைப் பொங்கலைத் தும்பிக்கையால் கடக்-தடக் என மொக்கிக் கொள்கிறார் நம்ம குட்டிப் பிள்ளையார்!
அந்தக் கும்பக் களிற்றான் கணபதிக்கு ஒரு இளைய களிற்றான் இருக்கான்! அவன் பேரு கந்தன்!
அடல் அருணைக் கோபுரத்துக்கு, அதன் வாயிலுக்கு வடக்கே இருக்கிறார்கள் இருவரும்! அவர்களை அருகில் சென்று அடியேன் கண்டு கொண்டேன்!


இப்போ கொஞ்சம் பிரிச்சி மேயலாம்!

அருணன்=சூரியனின் தேரோட்டி! அவன் சூரியனுக்கு முன்னரே உதயம் ஆவான்! அதான் அருணோதயம்-ன்னு பேரு! அவன் உதிக்கும் வேளையில் வானம் வெளிச்சமா இல்லாம, செக்கச் செவேர் என்று இருக்கும்! சிற்றஞ் சிறு காலை என்னும் பிரம்ம முகூர்த்தம் அது!
அதே போல் சிவபிரான் ஜோதிப் பிழம்பாய்ச், செக்கச் செவேர் என்று இருக்கும் தலம் = அருணை! அருண கிரி! அருணாச்சலம்!

அடல்-ன்னா வலிமை! அடல் அருணை-ன்னா வலிமை பொருந்திய அருணை மலை! மலைக்கு என்னாங்க பெருசா வலிமை?
நினைத்தாலே முக்தி தர வல்ல வலிமை இருக்கு அருணை மலைக்கு! அதான் அடல் அருணை!

அந்த அடல் அருணைத் திருக் கோபுரத்தே, அதன் வாயிலுக்கு வடக்கே சென்று, கண்டு கொண்டேன்! யாரை? பிள்ளையாரையும், முருகனையும்!
வடக்குக் கோபுரத்துக்கு அருகில் உள்ள முருகன், கோபுரத்து இளையனார்! கோபுரத்து இளையனார் சன்னிதி அருணகிரி மண்டபத்தின் உள்ளே இருக்கிறது!
அதற்குப் பக்கத்திலேயே வன்னி மர விநாயகர் சன்னிதி! அண்ணனும் தம்பியும் அருகருகே!
அந்த விநாயகர் எப்படி இருக்காரு-ங்கிறீங்க? - சர்க்கரை மொக்கிய கை, கட தட-ன்னு இருக்காரு!
நண்பர்கள் கன்னா பின்னா-ன்னு சாப்பாட்டை வச்சிக் கட்டினா, என்ன சொல்லுவோம்? மவனே நல்லா மொக்குறியா-ன்னு கேட்போம் இல்லையா?
அப்படிச் சீனிப்பண்டங்களை மொக்குறாரு கணபதி! கடக், தடக்-ன்னு தும்பிக்கையால மொக்குறாரு! யானைக்குப் பழம் ஊட்டி விட்டுப் பாருங்க! இதே கடக்-தடக் சவுண்டு வரும்! :)

கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே = கும்பம் போல் வயிறு! பானை வயிற்றுப் பிள்ளையார்! அவர் களிறு! ஆண் யானை!
அப்படின்னா அவரு தம்பியும் களிறு தானே! அதான் முருகனையும் இளைய களிறுன்னு சொல்லிட்டாரு அருணகிரி!
இப்படி அண்ணனும், தம்பியும் ஒன்னாச் சேர்ந்து இருக்கும் அழகான முதல் பாட்டு!

சரி....இவிங்கள பார்க்க வரவங்க மட்டும் என்னமோ, தலையில ஒரு தினுசா...வித்தியாசமாக் குட்டிக்கறாங்களே!
புத்தி, கித்தி கெட்டுப் போச்சா இவிங்களுக்கு? யாராச்சும் தன்னைத் தானே குட்டிப்பாங்களா?:)


வருவார் தலையில், தட-பட எனப் படு குட்டுடன்
அருணகிரி கந்தக் கவி மட்டுமா? சந்தக் கவியும் அல்லவா?
அதான் தலையில் குட்டிக் கொள்ளும் சத்தத்தைப் பாட்டிலேயே வச்சிட்டார்! மக்கள் எப்படிக் குட்டிக்கிறாங்கன்னு நினைக்கறீங்க? தடக், படக் என்று குட்டிக்கறாங்க! சரி, ஏன் குட்டிக்கணும்?

காவிரியின் ஆணவத்தை அடக்குகிறேன் பேர்வழி-ன்னு அகத்தியர் அவளை அடக்கி வைத்து விட்டார்!
ஊருக்குப் பொதுவான காவிரி ஆற்றை ஒருவர் மட்டும் அடக்கி ஆளலாமா?

என்ன தான் காவிரிப் பெண் ஆணவம் பிடித்துப் பேசி இருந்தாலும், ஊர் பாதிக்காதவாறு அல்லவா அவளுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்?
ஆனால் அகத்தியர் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மட்டுமே பார்த்தாரே அன்றி, ஊருக்கு ஏற்படும் தீங்கைப் பார்க்க மறந்து போனார்!

அப்போது நாரதர் சொல்லி வந்தார் விநாயகர்! காவிரியை விரித்து விட்டார்!!
சிறு பிள்ளையாய் அகத்தியர் முன் தோன்றி ஒரே சிரிப்பாய்ச் சிரித்தார்!
பிள்ளையின் தலையில் நச்-னு ஒரே கொட்டு...
கோபம் மேலும் வீங்க வீங்க,
குறுமுனி கையை ஓங்க ஓங்க... அச்சோ.....
ஓங்க ஓங்க நிற்பது ஓங்காரப் பொருள் விநாயகன் அல்லவா!

அகத்தியர் அஞ்சி நடுங்குகிறார்! அவனைக் குட்டத் தூக்கிய கையைத், தன் தலையிலேயே வைத்துத் தானே குட்டிக் கொண்டார்!
* அடுத்தவனைக் குட்ட எண்ணும் முன்னர், தன் தவற்றை முதலில் உணர வேண்டும்!
* ஊரைத் திருத்த எண்ணும் முன்னர், தன் தவற்றைத் தானே திருத்திக் கொள்ள முயல வேண்டும்!
அதான் தன்னைத் தானே குட்டிக் கொண்டார் அகத்தியர்! - தோன்றியது பிள்ளையார் குட்டு!

இனி மேல் பிள்ளையார் முன் குட்டிக் கொள்ளும் போது, இதை நினைவில் வையுங்கள்!
முதலில் தன்னைக் குட்டிக் கொண்ட பின், அடுத்தவரைக் குட்ட நினைக்கலாம்! :)
ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற், பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு!
தட-பட எனப் படு குட்டுடன், முதலில் நம் தலையில் குட்டிக் கொள்வோம்!
அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை, கந்தனின் அலங்காரச் செய்யுளைத் துவக்குவோம்!

அருணகிரி முருகனுக்கு அரோகரா!!!

கந்தனுக்கு அலங்காரம் கேஆரெஸ் செய்யலாமா?

சில பல தனிப்பட்ட காரணங்களுக்காக, வீட்டில் அம்மா, எனக்காகக் கந்தர் அலங்காரத்தை ஜபிக்கத் தொடங்கியுள்ளார்கள் போலும்! விராலிமலைக்கு என்னை அழைத்துச் சென்றதும் ஞாபகம் இருக்குங்களா?
கந்தரலங்காரம் சொல்லியதன் பயனாக, இப்போது தான் அம்மா சற்றே மன நிம்மதி பெற்றதாகச் சொல்கிறார்கள்! :)

அன்று இந்தியாவிற்குத் தொலைபேசினேன்; அப்போது....

"டேய் சங்கரா, என்னென்னமோ எழுதற! இப்போல்லாம் நான் கூட உன் பதிவுகளை வாசிக்க ஆரம்பிச்சிட்டேன்! நம்ம குல தெய்வம் முருகனைப் பத்தி எழுதேண்டா! "

"அதான் அப்பப்போ எழுதறேனேம்மா...முருகனருள்-ன்னு ஒரு வலைப்பூவில் எழுதறேன்! நான் எழுதிய அறுபடை வீட்டுக் காவடிச் சிந்தை, நண்பர்கள் எல்லாரும் விரும்பிப் பாடினார்கள்! நம்ம விராலிமலை, கந்த கோட்டம், அப்படி இப்படி-ன்னு எழுதிக்கிட்டு தான் இருக்கேம்மா!"

"அப்படியா? சரி சரி! நான் இப்போ தான் தட்டித் தடவி, உன் ப்ளாகை எல்லாம் பாக்குறேன்! அதான் தெரியலை போல!
நீ சொன்னியே-ன்னு மாதவிப்பந்தல்-ன்னு ஒரு சைட்டு! அதுக்கு மட்டும் தான் போனேன்! அது என்ன முருகனருள்? அது வேற தனியா வச்சிருக்கியா?
சரி, போவுது! சிவலிங்கம், சிவாராத்திரி, சிதம்பரம்-ன்னு எல்லாம் எழுதற போல! உண்டியல்-ல காசு போடாதீங்க-ன்னு எல்லாம் எழுதறியே! ஏன்-டா இப்படி எல்லாம் எழுதற?"

"அட விடுங்கம்மா! சில நேரங்களில் சில உண்மைகளைச் சொல்லித் தானே ஆகணும்! நீங்க எங்கள வளர்த்தா மாதிரியே, பூச்-பூச்சின்னு இருந்தா, நல்ல விசயங்கள் எல்லாம் அமுங்கித் தான் போவும்! அப்பப்ப சொல்லணும்!
இனி நான் இமெயில்-ல அனுப்பறது மட்டும் படிங்க, போதும்! எல்லாத்தையும் படிக்காதீங்க!"

"சரி, அது என்ன கோவிந்தா-ன்னு சொல்லும் போது மட்டும் நல்லா உருகி உருகி எழுதற! ஏதோ பெரிய பெரிய விளக்கமா வேற இருக்கு! நல்லாத் தான் இருக்கு! எனக்கே நல்லாப் புரியுதுடா!
ஆனா நம்ம வூடு இருக்குற வூட்டுல, இதெல்லாம் எங்க போயி படிச்சேன்னு தான் புரியலை! எல்லாம் உங்க ஆயா கொடுத்த செல்லம்! சின்ன வயசுல நம்ம கிராமத்துக் கோயில்-ல அந்த நாமக்காரப் பசங்க கூட, உன்னைச் சேரவே வுட்டுருக்கக் கூடாது!"

"அம்மா, கம்பேர் பண்ணிப் பேசனீங்கன்னா, எனக்குக் கோபம் வரும்! ஸ்டாப் இட்!
அதான் நீங்க கேக்கறத எழுதறேன்-ன்னு சொல்லிட்டேன்-ல!
நீங்க என்னை யாரோடும் பழக வுடலைன்னாக் கூட, வரவேண்டியது தானா வந்து சேரும்! வெளிச்சமே வராத காட்டுக்குள்ள, தாமரைப் பூவுக்கு, சூரியனை வரவுடாம குடை பிடிச்சிப் பாருங்களேன்? சூரியனுக்குப் பூக்குதா பூக்கலையா-ன்னு தெரிஞ்சி போயிரும்! இன்னொரு வாட்டி இப்படிக் கம்பேர் பண்ணிப் பேசாதீங்க! சொல்லிட்டேன்! ஆமா!"

"சரிடா, சரிடா! கோச்சிக்காதே! எலக்கியமாப் பேசி எங்கள மடக்க நல்லாவே கத்து வச்சிக்கிட்டு இருக்கப்பா நீ! சரீ....இந்தக் கந்தர் அலங்காரம் தினம் படிக்கச் சொன்னாங்களே! இது ஒன்னுமே எனக்குப் புரியலை! நீ பதம் பிரிச்சி எழுதிக் கொடுத்தீல்ல! அதைத் தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்! இதுக்கு அர்த்தம் சொல்லிப் படிச்சா நல்லா இருக்கும்-ல? பேசாம நீயே இதுக்கு அர்த்தம் சொல்லி எழுதேன்டா!"

"உம்...நம்ம வீட்டுக்கு ராகவன்-ன்னு ஒருத்தரு வந்தாரே! ஞாபகம் இருக்கா? நீங்க செஞ்ச மீனை நானும் அவர் கூடவே உக்காந்து சாப்பிட்டாகணும்-னு அடம் புடிச்சாரே! அவரு தான் இதுக்கெல்லாம் நல்லா அர்த்தம் எழுதுவாரு! ஆனா இப்போ அவர் அவ்வளவா சாமிப் பாட்டெல்லாம் எழுதறதில்ல!"

"ஏன்-பா?"

"அடுத்த வாட்டி அவரு நம்ம வீட்டுக்கு வரும் போது, அவரையே கேட்டுக்குங்க! சரி...நானே உங்களுக்கு விளக்கஞ் சொல்லி கந்தர் அலங்காரம் எழுதறேன்! சந்தோசமா? அவரு எழுதினா என்ன, நான் எழுதினா என்ன? எங்க ரெண்டும் ஒன்னு தான்!"

"ஊம்ம்ம்ம்ம்ம்"

"என்ன உம்ம்ம்ம்? மொத்தம் 108 பாட்டு இருக்கு! ஒரு தொகையலா வாரா வாரம் ஒன்னு தான் போட முடியும்! அப்படிப் போடும் போது, அர்த்தம் தனியாப் படிச்சிக்கோங்க! கூடவே இப்போ நீங்க தினமும் சொல்லுறதைச் சொல்லிக்குங்க! ஓக்கேவா?"

"சரிடாப்பா!"

"என்ன சரிடாப்பா? இப்படிப் பேசிப் பேசியே, காரியம் சாதிச்சிக்குவீங்களே! இதெல்லாம் என் கிட்ட தானே நடக்கும்? உங்க பொண்ணு கிட்ட பேசுங்களேன் பார்ப்போம்?"

"அட, அது இன்னொருத்தரு வூட்டுக்கு விளக்கேத்த போன பொண்ணுப்பா! அதைப் போயிச் சொல்லிக்கிட்டு..."

"உக்கும்...இன்னொருத்தர் வீட்டுக்குப் போயி எல்லா ரூம்-லயும் நல்லாவே வெளக்கு ஏத்துதாம்! மாசா மாசம் கரன்ட் பில்லு கட்டியே அழுவறாரு மாப்பிள்ளை! போதும் உங்க மொக்கை! நான் ஃபோனை வைக்கிறேன்! சாயந்திரம் அப்பா வந்தாப்பாரு கூப்புடுறேன்! பை!"

"கந்தர் அலங்காரம்....மறந்துடாத டா"

"பை..."



மேலே படிச்சீங்க-ல்ல! அதான் அடியேன் கந்தர் அலங்காரம் செய்ய வந்த கதை! :)

சரி, அலங்காரப் ப்ரியன்-ன்னு ஒருத்தருக்குத் தான் பேரு! அவருக்கு அலங்காரம்-ன்னா, இவனுக்கும் அலங்காரமா? இது என்ன மாமன்-மருமகன் கூட்டணியா?

அலங்காரம்-னா என்னங்க?
நாம பண்ணிக்கிட்டா மேக்கப், ஷோ, ஒப்பனை! ஆனா இறைவனுக்குப் பண்ணா மட்டும் அலங்காரம்!

எதுக்கு இறைவனுக்கு அலங்காரம் பண்ணனும்? சும்மா அப்பிடியே கும்பிட்டாப் போதாதா?
மலர் அலங்காரம், நகை அலங்காரம், உடை அலங்காரம், இசை அலங்காரம், பாட்டு அலங்காரம், தமிழ் அலங்காரம்...இம்புட்டும் எதுக்கு?

காதலி அலங்காரம் பண்ணிக்கிட்டு வந்தா, சூப்பரா இருக்கும்! வச்ச கண்ணு வாங்காம பார்க்கலாம்! "ஏய், இந்த ப்ளூ ஷேட்-ல, க்ரீன் பேட்டர்ன் போட்ட சாரீ-ல, நீ மயில் மாதிரி மின்னுறப்பா"-ன்னு வழியலாம்! அவளும் சந்தோசப்படுவா!

ஆனா இறைவனுக்கு அலங்காரம்?
கந்தனுக்கு அலங்காரம்?
தேவையா இதெல்லாம்?
சொல்லுங்க மக்களே, ஏன் அலங்காரம்? :)

முதல் வணக்கம்!

பிரணவப் பொருளான வேழமுகத்தானையும்
பிரணவப் பொருள் சொன்ன ஆறுமுகத்தானையும்
வணங்கி,
அருணகிரிநாதர் செய்தருளிய கந்தர் அலங்காரம் என்னும் இந்த நூலினைக் கைக்கொள்கிறேன்!
பொருள் சொல்லி, நயம் கண்டு, நலம் காண முயல்வோம், வாருங்கள்!
* வெறும் பாடல்களாய் மட்டுமே சொல்லாமல்,
* கதைகளாகவும், அருணகிரி வாழ்வின் சம்பவங்களாகவும்,
* ஆலயத்தில் முருகனுக்குச் செய்யும் அலங்காரங்களாகவும் சொல்லிச் செல்வேன்!

அங்கு போல், இங்கும் வந்திருந்து,
ஆதரவு தர வேணுமாய்
முருக அன்பர்களையும், நம் நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்!

இப்போது தான் ஆடிக் கிருத்திகை போச்சு! இன்று செவ்வாய்க்கிழமை...ஒவ்வொரு செவ்வாயும் செவ்வாயோன், சேயோன் அலங்காரம்...
தமிழ்க்கடவுள் முருகவேளுக்கு அலங்காரம்!
அவனருளாலே அவன் அலங்காரம்! இதோ துவங்குகிறது.....

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP