அந்தக் காலத்தில் புத்தகம், நூலகம் இதெல்லாம் இல்லாமலேயே, மற்ற ஏடுகளைப் படி எடுத்து வச்சி, படிக்கும் பழக்கம் இருந்திருக்கு போல! பாருங்களேன், ஆண்டாள் வள்ளுவரையும் இளங்கோவையும் வாசித்து, அதே வரிகளை அப்படியே பாட்டில் கையாளுறா!
அருணகிரியும் அதே போல பல நூல்களை ஆர்வமா படிச்சி வச்சிருக்காரு போல! சைவ நூல்களை மட்டுமல்ல! வைணவ நூல்களையும்!
ஆழ்வார்களின் வரிகளை அப்படியே தம் பாட்டில் எடுத்துக் கையாளுகிறார்! ஆர்வம் தானே காரணம்!
நீரளவே அகுமாம் நீராம்பல், தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு! நாமும் நல்ல புத்தகங்களைத் தேடித் தேடி வாசிப்போம்! அதுவும் இணைய உலகில், திரையில் படிப்பதைக் கொஞ்சம் நிறுத்தி, நல்ல புத்தகங்களைக் கையில் எடுத்து வாசிப்போம்!

மாயோனின் மாயத்தில் மயங்காத மனம் உண்டா என்ன? கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே? என்று சமணரான இளங்கோவே பாடுகிறார் என்றால், எம்புட்டு மயக்கி வச்சிருப்பான், இந்தப் பய புள்ள? :)
இன்னிக்கி கந்தர் அலங்காரத்தில், கந்தனுக்கு அலங்காரம் இல்லை!
என் ஆருயிர்க் கண்ணனுக்கு அலங்காரம்! செய்வது யாரு?
வேற யாரு? கேஆரெஸ் தான் ஆனா-வூனா கண்ணனை இழுத்துக்கிட்டு வருவான்!-ன்னு அவசரப் படாதீங்க மக்கா! கண்ணனுக்கு அலங்காரம் செய்வது அடியேன் அல்ல! திருமுருகச் செம்மல் அருணகிரிநாதர்!
ஓங்கி உலகளந்த உத்தமனை, ஓங்கி அலங்காரம் செய்கிறார் அருணகிரி! நாமும் பார்க்கலாமா? :)