அலங்காரம் பண்ணனும்-னா முதல் கண்டிஷன் என்னாங்க? உங்களுக்கு ஒருத்தர் ஒப்பனை செய்கிறார்-னு வச்சுக்குங்களேன்! அவர் அழுக்கு ஆடைகளுடன், குளிக்காமல், தூய்மை இல்லாமல், அழகு உணர்ச்சியே இல்லாமல், உங்களுக்கு அலங்காரம் செய்ய முன் வந்தால் எப்படி இருக்கும்? :)
ஒருத்தரை அலங்காரம் செய்யும் முன்னர், நம்மை நாமே குறைந்தபட்ச அலங்காரம் செஞ்சிக்கணும்!
சேறு பூசிய சட்டையுடன் போய், ஒருவருக்குச் சந்தனம் பூச முடியுங்களா?
இது கந்தர் அலங்காரம்!
கந்தனுக்கு அலங்காரம் செய்யும் முன்னர், நமக்குன்னு சில அலங்காரங்களைச் செஞ்சிக்கிடணும்!
என்ன அலங்காரம்? = பணிவலங்காரம்!!!
பணிவு என்பது மிகவும் உயர்ந்த அலங்காரம்!
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து - என்கிறார் ஐயன்!
பணிவையே ஆபரணமாகக் கொண்ட பெண்கள், அலங்காரமாக ஜொலிப்பதை இசையரசி எம்.எஸ் அம்மா, அன்னை தெரேசா போன்றவர்களின் உருவில் கண்டுள்ளோமே!

பணிவு அலங்காரம் எப்படி வரும்?
தன் நிலையை அறிந்தால் தானே பணிவு வரும்! தன்னால் தனியாக எதையும் செய்ய முடியாது! மொத்த உலகமே கூட்டு முயற்சியாலும், இறைவன் அருளாலும் தான் இயங்குகிறது! இதில் நம் சொந்த டாம்பீகம் எங்கு வந்தது?
அம்மா-அப்பா சம்பாதித்து வைத்தது நம் கல்வி! அதனால் இன்று பணம்!
அம்மா-அப்பா சம்பாதித்து வைத்தது நம் புண்ணியம்! அதனால் இன்று கண்ணியம்!
இப்படி பேறும், தவமும் நாம் தேடி வந்தது அல்ல! நம்மைத் தேடி வந்தது! = இப்படி எண்ணிப் பார்த்தால் பணிவலங்காரம் தானே அமையும்!
அருணகிரியும், பணிவால் தம்மை முதலில் அலங்காரம் செய்து கொண்டு, பின்னர் தான் கந்தர் அலங்காரம் செய்கிறார்!
பேறும் தவமும் ஒன்னுமே நான் செய்யலை! இருந்தாலும் என்னையும் தேடி வந்து அருள் செய்தவா! - என்று பணிவுடன் தன் அலங்காரத்தைத் துவக்குகிறார்! பாட்டைப் பார்க்கலாமா?
26 comments:
அருமை, அருமை.
பேறு, தவம், இவற்றை அழகா விளக்கியிருக்கீங்க. செஞ்சடா அடவியும், அதன் அழகும், அடடா!
//ஆனால் பிரபஞ்சம், பிறவி என்னும் சேற்றை மட்டும் கழுவிக் கொள்ள மனசுக்கு தோனுவதே இல்லையாம்! அதான் விசித்திரம்! வியப்பு!//
உண்மை, உண்மை. அவனருளால்தான் அதுவும் தோண வேணும்.
கண்ணன் தமிழ் விளக்கம் படிக்கச் சுவை.
கந்தவேள் அலங்காரம் கான/ண/ச் சுவை.
வாழ்க, வாழ்க!
//சிவபெருமான் ஐந்து எழுத்துக்காரன் அல்லவா? அவன் ஜடா முடியிலும் ஐந்து அலங்காரங்களைச் சூடி உள்ளான்!
கொன்றைப் பூ = மஞ்சள் நிறம்! கொத்து கொத்தாப் பூக்கும்\\
ஐந்தெழுத்துக்கு சொந்தமானவனை இப்படியும் அழகாக அலங்கரிக்க முடியுமா!!! (கோவையில் எங்க வீட்டில இந்த சரக்கொன்றை இருக்கே)
அருமை, அழகான விளக்கங்கள். அடுத்த செவ்வாய் கிழமை வருகிறேன். :)
//(கோவையில் எங்க வீட்டில இந்த சரக்கொன்றை இருக்கே)//
சின்ன அம்மிணிக்கா - போட்டோ ப்ளீஸ் :)
சென்னையில் கொன்றையைப் பாத்தே நாளாச்சு!
//ambi said...
அருமை, அழகான விளக்கங்கள்.//
சேற்றில் விழ வைத்தான் முருகன்-ன்னு சொன்ன்தா? அடிங்க! :)
//அடுத்த செவ்வாய் கிழமை வருகிறேன். :)//
இருங்க! பந்தல்-ல ஒரு டகால்டி பதிவு வியாழக் கிழமை போடறேன்! ஆனா நீங்க செவ்வாய் தான் வரணும்! சொல்லிட்டேன்! :)
//சேற்றில் விழ வைத்தான் முருகன்-ன்னு சொன்ன்தா? அடிங்க! :)//
சரி சீண்ட வேணாம்னு பாத்தேன், விட மாட்டீங்களே! :))
//ஈசன் வெப்பம் மிகுந்தவன் = அதனால் குளிர்ச்சி தரும் கொன்றை, தும்பை மலர்கள்!
பெருமாள் குளிர்ச்சி மிகுந்தவன் = அதனால் சூடு தரும் துளசி மலர்கள்!
//
இந்த வரிகளை தான் சொன்னேன்.
அது எப்படிங்கண்ணா, முருகன் பதிவுல கூட நைசா பெருமாளை நுழைச்சுடுறீங்க...? :p
//அது எப்படிங்கண்ணா, முருகன் பதிவுல கூட நைசா பெருமாளை நுழைச்சுடுறீங்க...? :p//
ஹா ஹா ஹா
அது நான் நுழைக்கல அம்பி!
அருணகிரி அருணகிரி-ன்னு ஒருத்தர், திருப்புகழ் பாடும் போதெல்லாம், ரெண்டு வரி கண்ணனையும் சேர்த்தே பாடிறாரு!
போதாக்கொறைக்கு, பெருமாளே பெருமாளே-ன்னு ஒவ்வொரு திருப்புகழையும் முடிக்குறாரு!
என்ன கொடுமை ராகவன்! :)
அருமையா சொல்லியிருக்கீங்க...அற்புதமா இருக்கு செஞ்சடா அடாவி....
அருமையான விளக்கம் இரவிசங்கர். பேறு, தவம் என்று தொடங்கி பிரவாகம் போல் பொங்கி வருகின்றது பொருளுரை. இது வரை கந்தரலங்காரம் படிக்காத குறையை இந்தப் பதிவு நீக்குகிறது.
அலங்காரத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் - அதற்கான காரணங்கள் அனைத்தையும் நீங்களே சொல்லி விட்டீர்கள், நன்றி கே.ஆர்.எஸ். பாம்பே ஜெயஸ்ரீ பாடி மெய்யுருகி கேட்டிருக்கிறேன்! தவம், பேறு ஏதும் இல்லாமல்!
சேற்றைக் கழிய வழிவிட்ட செவ்வேள்!
சேந்து கந்து நாதவிந்து எனமுந்து;பின்
வள்ளிக் காந்தன் அல்லவோ வேந்து!
அலம் மடித்திடும் அலங்காரம் இதுவே!
கந்தன் அலங்காரம் அதுவே அழகாரம்!
//கவிநயா said...
பேறு, தவம், இவற்றை அழகா விளக்கியிருக்கீங்க. செஞ்சடா அடவியும், அதன் அழகும், அடடா!//
ஆமாக்கா! எனக்கு எந்த செஞ்சடா அடவி படம் ரொம்ப பிடிச்சிப் போச்சு! அதுக்கேத்த படமா ரொம்ப நேரம் தேடினேன்! :)
//உண்மை, உண்மை. அவனருளால்தான் அதுவும் தோண வேணும்//
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி!
அருணகிரிக்கும் அப்படித் தோன்றியது தானே?
//கண்ணன் தமிழ் விளக்கம் படிக்கச் சுவை.
கந்தவேள் அலங்காரம் கான/ண/ச் சுவை//
நன்றிக்கா!
// ப்ரசன்னா said...
அருமையா சொல்லியிருக்கீங்க...அற்புதமா இருக்கு செஞ்சடா அடாவி....//
ஆமாங்க ப்ரசன்னா
செஞ்சடாடாவி = பேரே சந்தமா ரைமிங்கா இருக்குல்ல?
அருணகிரி வாக்கு அப்படி! சந்த நாக்கு, அருணகிரி வாக்கு!
//குமரன் (Kumaran) said...
அருமையான விளக்கம் இரவிசங்கர். பேறு, தவம் என்று தொடங்கி பிரவாகம் போல் பொங்கி வருகின்றது பொருளுரை.//
நன்றி குமரன்.
மொத்தம் 108 பாட்டு இருக்கே!
இன்னும் கொஞ்சம் வேகமா சொல்லிரட்டுமா? ரெண்டு ரெண்டு பாட்டா, இல்லை மூனு மூனா!
நீங்க என்ன நினைக்கிறீங்க?
//இது வரை கந்தரலங்காரம் படிக்காத குறையை இந்தப் பதிவு நீக்குகிறது//
கந்தர் அலங்காரம் என்பது சர்வ கார்ய சித்தியாம், குமரன்!
சஷ்டி கவசம் கவசமா இருந்து காக்கும்!
ஆனால் கந்தர் அலங்காரம், மெய்ப் பொருளுடன் அவரவர்க்கு ஏற்ற அலங்காரங்களைக் கொடுக்குமாம்!
மணம் வேண்டி நிற்பவருக்கு அலங்கார பாராயணம் மிகவும் விசேடம்!
மக்களுக்கு, துறவிகளுக்கு, ஞானியர்க்கு, புலவர்க்கு, அரசர்க்கு-ன்னு அவரவர் அலங்காரங்களை அருள வல்லதாம்!
அம்மா எதுக்கு அலங்கார பாராயணம் வேண்டிக்கிட்டாங்க-ன்னு எனக்கே இப்பத் தான் புரியுது :))
//வா (Jeeva Venkataraman) said...
அலங்காரத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் - அதற்கான காரணங்கள் அனைத்தையும் நீங்களே சொல்லி விட்டீர்கள்//
ஆகா...
எனக்கும் இந்த ஓப்பனிங் சாங் ரொம்ப பிடிக்கும் ஜீவா!
கூடவே விழிக்குத் துணை + ஆலுக்கு அணிகலம் + நாள் என் செய்யும் + சேல் பட்டு அழிந்தது!
இந்த ஐந்தும் தினப்படி பாராயணத்தில் உண்டு! :)
//கே.ஆர்.எஸ். பாம்பே ஜெயஸ்ரீ பாடி மெய்யுருகி கேட்டிருக்கிறேன்! தவம், பேறு ஏதும் இல்லாமல்!//
ஆகா...
Youtube இல்லை வேறு ஏதாவது சுட்டி இருந்தால் கொடுங்களேன் ஜீவா!
//சேற்றைக் கழிய வழிவிட்ட செவ்வேள்!
சேந்து கந்து நாதவிந்து எனமுந்து;//
மெல்லினமாக அழகுற முந்துகிறது! :)
//அலம் மடித்திடும் அலங்காரம் இதுவே!
கந்தன் அலங்காரம் அதுவே அழகாரம்!//
அழகாரம் திருப் புகழாரம்
முருகாரம் மனம் மகிழாரம்!
கந்தர் அலங்காரம் கண்டுவிட்டால் நம்ம குறை தீரும்.
எளிமையான சிறப்பான விளக்கங்கள். உங்கள் எழுத்துக்கள் எனக்கு படிக்கும் ஆவலை அதிகப்படுத்துகிறது.
ரவி அண்ணா, அலங்காரம் என்றால் என்ன? வெண்பட்டாலும், மலர்களாலும், பாடல்களாலும் அழகுபடுத்துவது மட்டும் தான் அலங்காரமா?
//வேறு ஏதாவது சுட்டி இருந்தால் கொடுங்களேன் ஜீவா!//
26ஆம் பாடல் - 'நீலசிகண்டியில்...' அந்த பாடலையும் பாடிக் கேட்டிருக்கிறேன். இரண்டையும் இந்த வார இறுதியில் வலையேற்ற முயல்கிறேன்.
பேறு - இல்லை
சேறு
- இருக்கு
ஆறு (நீர்) - கழுவிட வேண்டும்!
கீறு - கழுவினால் கிடைக்கும் 'வெண்' பேறு!
//மொத்தம் 108 பாட்டு இருக்கே!
இன்னும் கொஞ்சம் வேகமா சொல்லிரட்டுமா? //
ஆமாம் ஒரு வாரத்திற்கு இரண்டு பாட்டு வீதம் சொல்லலாமே?
ப்ரசன்னா said...
//மொத்தம் 108 பாட்டு இருக்கே!
இன்னும் கொஞ்சம் வேகமா சொல்லிரட்டுமா? //
ஆமாம் ஒரு வாரத்திற்கு இரண்டு பாட்டு வீதம் சொல்லலாமே?//
இந்த வாரம் ரெண்டாப் போட்டாச்சு பிரசன்னா! :)
//ஜீவா (Jeeva Venkataraman) said...
26ஆம் பாடல் - 'நீலசிகண்டியில்...' அந்த பாடலையும் பாடிக் கேட்டிருக்கிறேன். இரண்டையும் இந்த வார இறுதியில் வலையேற்ற முயல்கிறேன்//
சூப்பர்! நன்றி ஜீவா!
விண்மீன் வாரம் முடிஞ்ச பின்னாடி சுட்டி கொடுங்க!
//ஜீவா (Jeeva Venkataraman) said...
பேறு - இல்லை
சேறு - இருக்கு
ஆறு (நீர்) - கழுவிட வேண்டும்!//
:)
//கிடைக்கும் 'வெண்' பேறு!//
ஸ்வேதம், ஸ்வேதா என்னும் பேறு! சரி தானே ஜீவா? :)
//ஸ்வேதம், ஸ்வேதா என்னும் பேறு! சரி தானே ஜீவா? :)//
ஆகா, நல்லது!
"//
இந்த வாரம் ரெண்டாப் போட்டாச்சு பிரசன்னா! :) //
நன்றி.. ஆனா போன வாரம் எதுவுமே போடலியே? நான் வாரத்துக்கு 2 பாட்டு கேட்டா நீங்க ரெண்டு வாரத்துக்கு ரெண்டு பாட்டு போடறீங்க... ஆணி அதிகமோ?
aaha abaram, oam saravanabava.
ungalukku mujruganarul nitchayam undu.
vazhthtukkal
சுவையான பதிவு. ... தங்களால் தமிழையும் ஆன்மீகத்தையும் சுவைத்து இன்புற்றேன்.
Post a Comment