"சாகிற நேரத்தில் சங்கரா சங்கரான்னு கூவி என்ன பயன்? அதெல்லாம் முன்னாடியே உணர்ந்து இருக்கணும்" என்று ஒரு சிலர் சொல்லுவார்கள்!
"இல்லை இல்லை! உயிர் போகும் வேளையில், அறியாமலே கூட இறைவன் பேரைச் சொன்னால் மோட்சம் உண்டு! அஜாமிளன் கதை படிச்சதில்லீங்களா?" என்பது இன்னொரு சாரார் கருத்து! - எது உண்மை?
பண்ணுற பாவம் எல்லாம் பண்ணிட்டு, இறுதி வேளையில், பெத்த பையன் நாராயணனைப் பார்த்து, "டேய் நாராயணா"-ன்னு கூவிட்டா மோட்சம் தான்! சந்தேகம் இல்லை!
ஷார்ட்கட்! பைபாஸ் சாலையில் போயிடலாம் என்று சில கணக்குப் புலிகள் திட்டம் போடலாம்!
ஆனா "நாராயணா"-ன்னு முப்பது வினாடிக்கு முன்னால் சொல்லிட்டு, சரியாக "அந்தத்" தருணத்தில்,
"ஃபேனைப் போடச் சொன்னா, கம்முன்னு இருக்கியே! உன்னைப் போயி புள்ளையாப் பெத்தேனே! பாவீ---"
முப்பது வினாடிகளுக்கு முன் "நாராயணா"! ஆனால் "அந்த" விநாடியில் "பாவி"!
ஹா ஹா ஹா! "அந்த" வினாடி நம் கையில இல்லியே! அப்போ கணக்குப் புலிகள் என்ன செய்ய முடியும்?
அருணகிரிப் பெருமான் இந்தக் கணக்குப் புலிகளை எல்லாம் அடித்து நொறுக்குகிறார்! பார்க்கலாம் வாங்க அலங்காரம்-03!
இந்த அலங்காரப் பாடலில் தமிழுக்கே உரிய ழ-கரம் 7 முறை, ற-கரம் 13 முறை வந்துள்ளன. எண்ணிப் பாருங்க! :)
31 comments:
கற்ற கல்வியெல்லாம் கடைவழிக்கு வாராது;
நித்தம் அவன் பெயரை நிறுத்தாமல் சொல்லி வைத்தால்
சற்றும் கவலையில்லை
கூற்றுவனே வந்தாலும்.
பதிவு மிகச் சுவை.
//கவிநயா said...
கற்ற கல்வியெல்லாம் கடைவழிக்கு வாராது;
நித்தம் அவன் பெயரை நிறுத்தாமல் சொல்லி வைத்தால்
சற்றும் கவலையில்லை
கூற்றுவனே வந்தாலும்//
இப்பல்லாம் பின்னூட்டத்திலேயே கவிதை வாசிக்க ஆரம்பிச்சிட்டீங்க-க்கா :)
//இப்பல்லாம் பின்னூட்டத்திலேயே கவிதை வாசிக்க ஆரம்பிச்சிட்டீங்க-க்கா :)//
கவிதையை தூண்டற மாதிரி அவ்ளோ சூப்பரா எழுதறீங்கன்னு அர்த்தம்! :)
//கவிநயா said...
கவிதையை தூண்டற மாதிரி அவ்ளோ சூப்பரா எழுதறீங்கன்னு அர்த்தம்! :)//
:)
மீ தி மவுன விரதம்! :)
எளிமையா, இனிமையா, அருமையா சொல்றீங்க..
//இந்த அலங்காரப் பாடலில் தமிழுக்கே உரிய ழ-கரம் 7 முறை, ற-கரம் 13 முறை வந்துள்ளன. எண்ணிப் பாருங்க! :)
//
ற-கரம் 11 முறை தானே வந்துள்ளது ?? ரெண்டை விட்டுட்டேனா?? இல்லை இங்க எத்தன பேர் கணக்கில் புலின்னு செக் பண்றீங்களா??
//இந்த அலங்காரப் பாடலில் தமிழுக்கே உரிய ழ-கரம் 7 முறை, ற-கரம் 13 முறை வந்துள்ளன. எண்ணிப் பாருங்க! :)//
இதற்கு ஏதாவது சிறப்பு உண்டா?
//மொத்தம் மூனு கோடுகள்! விபூதி என்னும் திருநீற்றிலும் மூனு கோடுகள்!//
இதே விளக்கம் வைணவர்கள் போடும் திருமண் காப்பிற்கும் பொருந்துமா? அல்லது இவையெல்லாம் திருச்சின்னங்களா?
//அந்த Fixed Deposit கூட ஒருகால் உங்களுக்குக் கிட்டாமல் போக வாய்ப்புண்டு! ஆனால்...
கந்த Fixed Deposit என்னும் வைப்பு நிதி!//
கவிதை.. கவிதை..
////அது வைத்த-மா-நிதி! உங்கள் தனிப் பெருஞ் சொத்து! அதற்கு...//
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளா?
//கழுத்தில் சுருக்கு! கந்தவேள் முறுக்கு! //
கும்மி: சுருக்கு! இருக்கு..முறுக்கு எங்கே ??
//ற-கரம் 11 முறை தானே வந்துள்ளது ?? ரெண்டை விட்டுட்டேனா?? இல்லை இங்க எத்தன பேர் கணக்கில் புலின்னு செக் பண்றீங்களா??//
ஹா ஹா ஹா
இப்போ எண்ணிப் பாருங்க ராகவ்!
புலி எல்லாம் சரியா எண்ணும்! நீங்க எப்படி? :)
கழுத்திற் சுருக்கிட்டு = கழுத்தில் சுருக்கிட்டு என்று பதம் பிரித்தால் ஒரு றகரம் மிஸ் ஆவும், மிஸஸ் ஆவும் தான்! :)
//Raghav said...
//இந்த அலங்காரப் பாடலில் தமிழுக்கே உரிய ழ-கரம் 7 முறை, ற-கரம் 13 முறை வந்துள்ளன. எண்ணிப் பாருங்க! :)//
இதற்கு ஏதாவது சிறப்பு உண்டா?//
ஜிரா வாங்க!
//
//மொத்தம் மூனு கோடுகள்! விபூதி என்னும் திருநீற்றிலும் மூனு கோடுகள்!//
இதே விளக்கம் வைணவர்கள் போடும் திருமண் காப்பிற்கும் பொருந்துமா? அல்லது இவையெல்லாம் திருச்சின்னங்களா?//
திருநீற்றுக்குப் பொருள் பசு-பதி-பாசம்!
திருமண் காப்புக்கு அதுவன்று! அது இறைவனின் திருப்பாதங்கள்! உருவ அமைப்பும் அப்படித் தான் இருக்கும்!!
திருவடிகளைச் சிந்தையில் சதாசர்வ காலமும் தாங்கிக் கொள்கிறேன் என்று இட்டுக் கொள்வதே திருமண் காப்பு!
சின்னங்கள் என்றால் பொருள் இல்லை என்று ஆகி விடாது! ஒன்றைக் குறிக்க வந்தது தானே சின்னம்? சாலைப் போக்குவரத்துச் சின்னங்களே அப்படி என்றால், இது போன்ற சின்னங்களுக்கும் பொருள் நிச்சயம் உண்டு!
//raghav said...
//அது வைத்த-மா-நிதி! உங்கள் தனிப் பெருஞ் சொத்து! அதற்கு...//
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளா?//
ஹா ஹா ஹா
ஜிரா, வாங்க! :)
//Raghav said...
//கழுத்தில் சுருக்கு! கந்தவேள் முறுக்கு! //
கும்மி: சுருக்கு! இருக்கு..முறுக்கு எங்கே ??//
சுருக்கு போட்டு இழுத்தால்
முறுக்கி-க்கும் :))
//ஹா ஹா ஹா
இப்போ எண்ணிப் பாருங்க ராகவ்!
புலி எல்லாம் சரியா எண்ணும்! நீங்க எப்படி? :)
//
முதல்ல கணக்கு பண்ணும்போது 11 இருந்தது. இப்போ 13 இருக்கு?? ம்ம் புலி ஆகனும்னு நினைச்சேன்.. என்னைய பலி(கடா) ஆக்கிட்டீங்களே
//திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளா?//
ஹா ஹா ஹா
ஜிரா, வாங்க! :)//
ஜூப்பர், ஜிரா வந்து விளக்கம் சொல்லுங்க.. மீ அண்ட் வைத்தமாநிதி பெருமாள் வெயிட்டிங்..
//ஒரே நேரத்தில் என்சாயும் மாடலாம்! எம்பெருமானையும் நாடலாம்!//
எவ்வாறு??
//Raghav said...
//ஒரே நேரத்தில் என்சாயும் மாடலாம்! எம்பெருமானையும் நாடலாம்!//
எவ்வாறு??//
என்ன ராகவ்? இன்னிக்கி இங்க காற்றழுத்த மண்டலமா? :)
எவ்வாறு? = எந்த ஆறு? = எந்த வழி?
சொல்லுங்களேன்!
வேணும்னா...
என்சாயும் மாடலாம் = நான் சொல்லுறேன்!
எம்பெருமானையும் நாடலாம் = நீங்க சொல்லுங்க!
//திருவடிகளைச் சிந்தையில் சதாசர்வ காலமும் தாங்கிக் கொள்கிறேன் என்று இட்டுக் கொள்வதே திருமண் காப்பு!//
எம்பெருமான் திருவடிகளை நாம் தாங்கிக் கொள்வது சரி, பின்பு ஏன் அதையே நாம் பெருமாளுக்கும் இட வேண்டும்?
//முதல்ல கணக்கு பண்ணும்போது 11 இருந்தது. இப்போ 13 இருக்கு?? ம்ம் புலி ஆகனும்னு நினைச்சேன்.. என்னைய பலி(கடா) ஆக்கிட்டீங்களே//
இனி வரலாற்றில் நீங்க புலி-கடா ராகவ் என்று அழைக்கப்படுவீர்களாக! :)
அதான் சொன்னேனே!
//கழுத்திற் சுருக்கிட்டு = கழுத்தில் சுருக்கிட்டு என்று பதம் பிரித்தால் ஒரு றகரம் மிஸ் ஆவும்//-ன்னு!
அதுக்குள்ளாற எண்ணப் போயிட்டீங்க! புலி-கடா ஆயிட்டீங்க! :)
//இனி வரலாற்றில் நீங்க புலி-கடா ராகவ் என்று அழைக்கப்படுவீர்களாக! :)//
ஆஹா.. எனக்கு கிடைச்சிருக்குற முதல் பட்டம்.. ரெம்ப சந்தோஷம்.
//என்ன ராகவ்? இன்னிக்கி இங்க காற்றழுத்த மண்டலமா? :)
//
இங்கே என்றில்லை.. எங்கெல்லாம் கே.ஆர்.எஸ் பதிவு உண்டோ அங்கெல்லாம் தென்றல் காற்றழுத்த மண்டலம் தான்..
//அதுக்குள்ளாற எண்ணப் போயிட்டீங்க! புலி-கடா ஆயிட்டீங்க! :)//
அப்புடிப்பாத்தாலும் 12 வந்துருக்கனுமே.. 11 தானே முதல்ல வந்தது..
அருமை அருமை.
//இப்போ என்சாய் மாடுவோம் என்று மட்டும் இருக்க வேண்டியதில்லை! ஒரே நேரத்தில் என்சாயும் மாடலாம்! எம்பெருமானையும் நாடலாம்!
//
சூப்பரு. வாழ்நாள் முழுவதும் பாவங்களைப் பண்ணிட்டு சாகும்போது சங்கரா சங்கரான்னா போதுமா?
அயில்வேல் இங்க வருது
"
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க"
:-)
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில் தேன் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே.
//எம்பெருமான் திருவடிகளை நாம் தாங்கிக் கொள்வது சரி, பின்பு ஏன் அதையே நாம் பெருமாளுக்கும் இட வேண்டும்?//
ஆமா ஏன்?
அண்ணா,
செவ்வாய்கிழமை பதிவு போட மறந்துட்டிங்களா? ஊட்ல தங்கமணி கேக்க சொன்னாங்க. தொடர்ந்து படிக்கிறாங்களாமாம்.
உடம்பு இப்ப தேவலையா? காய்ச்சல் எல்லாம் சரியாயிடுச்சா?
//ப்ரசன்னா said...
அருமை அருமை.
சூப்பரு//
நன்றி பிரசன்னா!
//அயில்வேல் இங்க வருது
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க//
சூப்பர்! இடம் சுட்டிப் பொருள் விளக்கம்-கலக்கல்ஸ் ஆஃப் பிரசன்னா!
//குமரன் (Kumaran) said...
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில் தேன் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே//
சூப்பரு!
நன்றி குமரன் பாட்டை எடுத்து விட்டதற்கு! ராகவனுக்கும் பிடிச்ச பாடல் வரிகள் இவை!
மாமயிலோன் வேல் பட்டு அழிந்தது வேலை!
அவன் கால் பட்டு அழிந்தது
இங்கு என் தலை மேல்
அயன் கையெழுத்தே!
அடா, அடா, அடா! என்னாமா லயிச்சி சொல்லி இருக்காரு அருணகிரி!
கை எழுத்தைக் கால் எழுத்து அழித்து விட்டதாம்! அதுவும் எப்படி?
அயன் கை எழுத்தும் தலை மேல் படிகிறது!
அவன் கால் எழுத்தும் தலை மேல் படிகிறது!
இப்படி இரண்டும் கூடும் இடம் தலை! அதான் பாட்டிலும் தலையை நடுவில் வச்சிருக்காரு!
எம்பெருமானின் "அடிப்"படையே அடிப்படை!
@ராகவ், குமரன்
//எம்பெருமான் திருவடிகளை நாம் தாங்கிக் கொள்வது சரி, பின்பு ஏன் அதையே நாம் பெருமாளுக்கும் இட வேண்டும்?//
அலோ
இது கந்தர் அலங்காரம்! கார்வண்ணன் அலங்காரம்-ன்னு நினைச்சீங்களா? இருங்க ராகவன் வந்து தட்டினாத் தான் சரிபடுவீங்க! :)
இந்தக் கேள்வியைக் கூடல் பதிவுக்கு pass செய்கிறேன்!
//எம்பெருமான் திருவடிகளை நாம் தாங்கிக் கொள்வது சரி, பின்பு ஏன் அதையே நாம் பெருமாளுக்கும் இட வேண்டும்?//
திருமண் காப்பு ஏன்-னு ஒருத்தர் விளக்கிட்டு இருந்தாரு!
அப்போ ஒரு எட்டு வயசுக் குழந்தை இதே கேள்வியைத் தான் கேட்டுச்சு! அவர் அப்படியே திக்பிரமை பிடிச்சிப் போயி நின்னுட்டாரு! :)
அப்பறம் அந்தச் சின்னப் பொண்ணுக்கு விளையாட்டு காட்டி, விளக்கத்தைச் சொல்லி வச்சேன்! இப்ப நினைச்சாலும் சிரிப்பு வரும் :)
//Sridhar Narayanan said...
அண்ணா,
செவ்வாய்கிழமை பதிவு போட மறந்துட்டிங்களா? ஊட்ல தங்கமணி கேக்க சொன்னாங்க. தொடர்ந்து படிக்கிறாங்களாமாம்.//
ஆகா...
இப்படி எல்லாம் வூட்ல, அண்ணி கிட்டக்க என்னைய போட்டூக் கொடுக்கறீங்களா?
//உடம்பு இப்ப தேவலையா? காய்ச்சல் எல்லாம் சரியாயிடுச்சா?//
இப்போ ஓக்கே அண்ணாச்சி!
காய்ச்சலால் தான் செவ்வாய்க் கிழமைப் பதிவு தள்ளிப் போச்சு!
அண்ணியைக் கோச்சிக்க வேணாம்-னு சொன்னேன்-னு சொல்லுங்க! சூடா ஒரு கப் மிளகு ரசம் கேட்டு வாங்கிக் குடிச்சிக்கறேன்! :)
Post a Comment