சப்பாணியா? அப்படீன்னா என்ன? ஜப்பான் தான் சப்பான்-ன்னு ஆகி, சப்பாணி ஆயிருச்சா? தமிழ்க் கடவுள் முருகன், ஜப்பான் கடவுள் ஆயிட்டானா?
அது சரி நம்ம சூப்பர் ஸ்டார், ஜப்பான் ஸ்டார் ஆகும் போது, எங்க முருகப் பய புள்ள, ஜப்பான் கடவுள் ஆகக் கூடாதா என்ன? :)
சப்பாணி-ன்னா என்னாங்க? எந்தத் தமிழ்ச் சினிமாவில் வருது? சப்பாணியா யார் வருவா? சொல்லுங்க பார்ப்போம்! :)
"ஆத்தா வையும், சந்தைக்குப் போவணும்! காசு கொடு"-ன்னு, அப்பவே ரிப்பீட்டிய கமல் தான் சப்பாணி! நிரந்தரக் கனவுக் கன்னி ஸ்ரீதேவி தான் மயிலு! அடடா, என்ன ஒரு படம்!
முருகனும் ஒரு சப்பாணி தான்! :) முருகா சப்பாணி கொட்டாயே!
சப்பாணி-ன்னா தளர்ந்து தளர்ந்து நடத்தல்!
சின்னப் புள்ளைங்க நடக்க ஆரம்பிக்கும் பருவம்! ஆனா நடக்காதுங்க! பொத்துன்னு விழுந்துருங்க!
உடனே இரு கைகளையும் அதுங்களே தட்டிக்கும்! பொக்கையாச் சிரிக்கும்! கூல் பேபி கூல்...என்பது போல! :)

இதைத் தமிழ் இலக்கியம் மிக அழகாகப் படம் பிடிச்சிக் காட்டுது!
பரிசில் வாங்க வேண்டி, மன்னர்களை ஆகா, ஓகோ-ன்னு புலவர்கள் உலா பாடிக் கொண்டிருந்த கால கட்டம்! ஆனால் அதை விடுத்து, இனிய குடும்பத்தையும், அழகான குழந்தைகளையும் பாடும் போக்கினை ஏற்படுத்திக் கொடுத்தவர்
பெரியாழ்வார்! அவர் தான்
பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி!
புட்டியில் சேறும், புழுதியும், கொண்டு வந்து,
அட்டி அமுக்கி அகம்புக் கறியாமே!
சட்டித் தயிரும், தடாவினில் வெண்ணெயும், உண்
பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி! கொட்டாய் சப்பாணி! - என்று பாடுகிறார்!
பின்னாளில் இதை
பிள்ளைத் தமிழ் என்று வகைப்படுத்தி, சப்பாணிப் பருவம் என்று பெயர் வைத்தார்கள்!
சப்பாணிப் பருவம் = இரு கைகளையும் ஒருங்கு சேர்த்து டப்-டப்-ன்னு கொட்டும் பருவம்! பொதுவா, இது ஒன்பதாம் மாதம் நடக்கும்!
அருணகிரியும் இந்தச் சப்பாணி முருகக் குழந்தையைக் கொஞ்சறாரு! பார்க்கலாமா?
24 comments:
நல்ல பதிவு நண்பரே!
invit you to join now in bloggersunit.
அருமை அண்ணா.. போன பதிவு எப்புடியோ விட்டுப்ப்போச்சு.. அதையும் படிக்கணும்...
என் அப்பன் முருகப்பெருமான் காக்கட்டும்..
கொஞ்ச நாழி கழித்து வர்றேன்..
//TamilBloggersUnit said...
நல்ல பதிவு நண்பரே!
invit you to join now in bloggersunit//
நன்றிங்க!
அட, எத்தனை திரட்டியில் தான் சேருவது? :)
தமிழிஷ்-க்கே நண்பர்கள் வற்புறுத்தி வற்புறுத்தி, இப்ப தான் வந்தேன்! :)
//Raghav said...
அருமை அண்ணா.. போன பதிவு எப்புடியோ விட்டுப்ப்போச்சு.. அதையும் படிக்கணும்...//
அப்போ...வரதராஜன் கிட்ட இருந்தீங்க போல! அதனால் முருகன் வராத-ராஜன் ஆயிட்டான்! :)
//என் அப்பன் முருகப்பெருமான் காக்கட்டும்..//
இதை ஜிரா என்னும் ராகவன் சொல்றானா? :)
மின் தமிழ் குழுமத்தில் ஒரு உரையாடல் நடைபெற்றது. அருணகிரிநாதர் கௌமார சமயத்தைச் சார்ந்தவர் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் அவர் பெரும்பான்மையான பாடல்களில் பெருமாளை முதலில் பாடிவிட்டு பின்னர் அவனது மருகனைப் பாடுகிறார்; அதனால் அவரை வைணவர் என்றும் சொல்லவேண்டும் என்று ஒரு கருத்து சொல்லப்பட்டது. அப்போது 'அப்படிப் பார்த்தால் அவர் ஒரு சாக்தரும் கூட. சைவ இலக்கியங்கள் சிவன் தன் இடப்பாகத்தில் சக்தியை வைத்திருக்கிறார் என்று சொல்லும் போது அருணகிரிநாதரும் அபிராமி பட்டரும் அம்மை தன் வலப்பாகத்தில் சிவனை வைத்திருக்கிறாள் என்று அன்னைக்கு ஏற்றம் தருகிறார்கள்' என்று இன்னொரு கருத்து சொல்லப்பட்டது. இந்தப் பாடலில் 'ஒருவரைப் பங்கில் உடையாள்' என்று சொல்கிறார் அருணகிரியார் - அவர் சாக்தரும் கூட என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. :-)
'ஒருவன்' என்று வைணவ இலக்கியங்களும் சிவபெருமானைப் போற்றுகின்றன என்று நினைக்கிறேன். ஈடு இணையில்லா ஒருவன் என்ற பொருளில். ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர - இந்த வரிகளுக்கு ஷைலஜா அக்கா சொன்ன பொருளை நினைத்துப் பார்க்க வேண்டும். திருவாய்மொழியில் ஒரு இடத்தில் 'ஒருவன் என்று ஏந்த நின்ற நளிர் மதிச் சடையன் என்கோ' என்று பராங்குச நாயகி பாடுகிறாள்.
ஹவாய் மகளிர் அணிகிற மாதிரியான புல்லாடை, இலையாடைகளை தங்கள் அரைகளில் பழங்காலத் தமிழ் மகளிர் அணிந்திருந்ததாக சங்க இலக்கியப் பாடல்கள் சில சொல்கின்றன. அந்த இலையாடைகளின் எச்சமோ அரைஞாணில் வெள்ளி இலை செய்து இடுவது?
எண் திசை மலைகள் எவை இரவி? எனக்குத் தெரியாது.
மேரு மலை எங்கே இருக்கு இரவி? எனக்குத் தெரியாது.
ஈடுன்னா என்ன இரவி? ஈடேறுதல்ன்னா என்ன இரவி? எனக்குத் தெரியாது.
ஃ ஆய்தமா ஆயுதமா?
உண்மையாகவா? ஆறுமுகம், பன்னிரு கைகள், பதினெட்டு கண்களைப் பற்றி எந்த ஒரு சங்க இலக்கியமும் பேசவில்லையா? பரிபாடலை எடுத்துப் புரட்டிப் பார்க்க வேண்டும். வேறெங்கு இல்லாவிட்டாலும் பரிபாடலில் இருக்கும் வாய்ப்புகள் மிகுதி.
//குமரன் (Kumaran) said...
உண்மையாகவா? ஆறுமுகம், பன்னிரு கைகள், பதினெட்டு கண்களைப் பற்றி எந்த ஒரு சங்க இலக்கியமும் பேசவில்லையா?//
ஹிஹி!
இதுக்கு நான் புனித பிம்பமாய் உண்மையைச் சொல்லணுமா இல்லை...இது பற்றிப் பேச விருப்பமில்லை-ன்னு கழண்டிக்கணுமா குமரன்? :))
//பரிபாடலை எடுத்துப் புரட்டிப் பார்க்க வேண்டும்//
புரட்டுங்க! புரட்டுங்க!
நிச்சயம் இருக்கு! எனக்குத் தெரிஞ்சே ரெண்டு எடுத்துல இருக்கு! :)
//ஆறு இரு தோளவை; அறு முகம் விரித்தவை//
அறு முகத்து ஆறு-இரு தோளால் வென்றி
நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே
என்று கேசவனாரும் பாடுகிறார்! :)
@குமரன்
பரிபாடல் காலம் என்ன குமரன்?
எட்டுத் தொகை நூல்களுள் பரிபாடல் முதன்மையா? இறுதியா?
ஏன் கேட்கறேன்னா...
இரு பண்பாட்டுக் கலப்புகளும் நிகழ்ந்த பின் வரும் திசைச் சொற்கள் எல்லாம் கூட பரிபாடலில் வரத் துவங்கி விட்டது! காட்டு: ஆதி சேடன் பற்றிய குறிப்புகள்!
ஆறு முகம், பன்னிரு கை மட்டுமல்ல...
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
மேலும் வேத நெறி, தழலோம்பும் பார்ப்பார், அவர்கள் வையையில் இறங்காமல், கரையிலேயே நிற்றல்-ன்னு எல்லாம் குறிப்புகள் காட்டப்படுகின்றன சில பரிபாடல்களில்! அதனால் இவற்றைக் எவ்விதக் காய்தல் உவத்தல் இன்றி, நுனித்துணர வேணும்! இலக்கிய ஆர்வமும், வரலாற்று ஆர்வமும் துணை செய்யட்டும்!
//குமரன் (Kumaran) said...
மின் தமிழ் குழுமத்தில் ஒரு உரையாடல் நடைபெற்றது.//
ஆமாம் குமரனும்! நானும் வாசித்தேன்! நீங்களும் மின்னஞ்சலில் வேற அனுப்பி இருந்தீர்களே! இராம.கி ஐயாவின் பதிவுகள், சில மின்தமிழ் ஆக்கங்கள் - இவற்றைப் பெரும்பாலும் தவற விடுவதில்லை!
//அருணகிரிநாதர் கௌமார சமயத்தைச் சார்ந்தவர் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் அவர் பெரும்பான்மையான பாடல்களில் பெருமாளை முதலில் பாடிவிட்டு பின்னர் அவனது மருகனைப் பாடுகிறார்; அதனால் அவரை வைணவர் என்றும் சொல்லவேண்டும் என்று ஒரு கருத்து சொல்லப்பட்டது.//
ஹிஹி! இதெல்லாம் டூ மச்! :)
//அப்போது 'அப்படிப் பார்த்தால் அவர் ஒரு சாக்தரும் கூட.//
இதை வேணும்னா ஒத்துக்கறேன்! :)
//அருணகிரிநாதரும் அபிராமி பட்டரும் அம்மை தன் வலப்பாகத்தில் சிவனை வைத்திருக்கிறாள் என்று அன்னைக்கு ஏற்றம் தருகிறார்கள்' என்று இன்னொரு கருத்து சொல்லப்பட்டது//
100%! என் நண்பனும் ஒப்புக்கிடுவான்! :)
//இந்தப் பாடலில் 'ஒருவரைப் பங்கில் உடையாள்' என்று சொல்கிறார் அருணகிரியார் - அவர் சாக்தரும் கூட என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. :-)//
இதைப் பதிவிடும் போது, மின்தமிழில் ஹரியண்ணா சொன்னது தான் எனக்கும் நினைவுக்கு வந்தது! :)
//'ஒருவன்' என்று வைணவ இலக்கியங்களும் சிவபெருமானைப் போற்றுகின்றன என்று நினைக்கிறேன். ஈடு இணையில்லா ஒருவன் என்ற பொருளில்//
உண்மை!
தன்னிகரில்லா "குணங்களைக் கொண்டவன்" என்ற முறையில் இந்த "ஒருவன்"!
இதைச் சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் - இருவருக்குமே வைணவ இலக்கியங்கள் காட்டுகின்றன! பராங்குச நாயகி பாடலும் இதற்கு ஒரு காட்டு!
ஊழி முதல்வனாய் நின்ற "ஒருவனை" என்கிறது திருவெம்பாவை!
//ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர - இந்த வரிகளுக்கு ஷைலஜா அக்கா சொன்ன பொருளை நினைத்துப் பார்க்க வேண்டும்//
ஆமாம்!
அப்போ இரண்டு "ஒருத்திகள்" இருக்க முடியும் அல்லவா?
அதே போல் இரண்டு "ஒருவன்களும்" இருக்க முடியும்! :)
//குமரன் (Kumaran) said...
ஹவாய் மகளிர் அணிகிற மாதிரியான புல்லாடை, இலையாடைகளை தங்கள் அரைகளில் பழங்காலத் தமிழ் மகளிர் அணிந்திருந்ததாக சங்க இலக்கியப் பாடல்கள் சில சொல்கின்றன.//
ஆமாம் குமரன்! இது பற்றி ஒரு சின்ன தோற்றுவாய்ப் பதிவு இடுங்களேன்! சங்க கால உடைகள்! வேலன்டைன்ஸ் டே வேறு வரப் போகுது! எங்கே நீங்க போன ஆண்டே போடுவதாய்ச் சொன்ன தமிழ் வேலன்-டைன் நாள்? :)
//அந்த இலையாடைகளின் எச்சமோ அரைஞாணில் வெள்ளி இலை செய்து இடுவது?//
இருக்கலாம்!
ஆலிலைக் குழந்தையின் நினைவாயும் இருக்கலாம்!
அரை ஞாண் கயிறு-ன்னாலே தனி ஆராய்ச்சி தான்! ராகவனைப் பண்ணச் சொல்றேன்! :)
தஞ்சைப் பெரிய கோயில் உள்ளாலை ஓவியங்கள்...அதில் கூட இப்படியான உடைகள் உன்டு குமரன்! பார்த்து வியந்து போயிருக்கேன்!
//குமரன் (Kumaran) said...
எண் திசை மலைகள் எவை இரவி? எனக்குத் தெரியாது.
மேரு மலை எங்கே இருக்கு இரவி? எனக்குத் தெரியாது.
ஈடுன்னா என்ன இரவி? ஈடேறுதல்ன்னா என்ன இரவி? எனக்குத் தெரியாது.//
ஃ ஆய்தமா ஆயுதமா குமரன்?
எனக்குத் தெரியாது :)
அன்னைதான் அரனுக்கு இடமளித்தாள் (இது அந்த 'இடம்' :). இதில் சந்தேகமென்ன? :)
//குமாரன் உடைமணி சேர்
திருவரை கிண் கிணி அசை பட//
அழகு, வெகு அழகு. முருகக் குழந்தை படம் அவ்வளவா பார்த்ததில்லை. ச்வீட்.
//கவிநயா said...
அன்னைதான் அரனுக்கு இடமளித்தாள் (இது அந்த 'இடம்' :). இதில் சந்தேகமென்ன? :)//
ஹா ஹா ஹா
கவிக்கா சொன்னா கண்டிப்பா கரெட்டாத் தான் இருக்கும்! :)
//முருகக் குழந்தை படம் அவ்வளவா பார்த்ததில்லை. ச்வீட்//
அலோ...
கண்ணக் குழந்தையும் ஸ்வீட்-ன்னு சொல்லுங்க! :))
Very interesting, I always think Murugan and Kannan are the same. Thanks for wonderful post.. and just realised your blog union friend Dev is my collage met ;)
//Srivats said...
Very interesting, I always think Murugan and Kannan are the same//
ha ha ha! both have a lot of connexions and best pals from kurinji & mullai :)
//Thanks for wonderful post.. and just realised your blog union friend Dev is my collage met ;)//
Oh...Dev annan unga college thaana? ellarum oru group-aa thaan kilambi irukeenga pola :)
I will ask on him gtalk tonite! :)
It is the boundless grace of Lord Muruga that I happenned to stumble upon your blog when I was searching for Anju Mkukam Thonril. I find it a great blessing to read your blog on Lord Muruga. But it looks like you have stopped writing in this Blog. I would like to read your writings on Lord Muruga. kindly let me know your new blog and how I can subscribe so that I get notification whever you write.
Vetrivel MuruganukkU Arohara
WithBestRegards
Meyyappan S
//It is the boundless grace of Lord Muruga that I happenned to stumble upon your blog when I was searching for Anju Mkukam Thonril//
அஞ்சு முகம் தோன்றில், ஆறு முகம் தோன்றும் பாட்டு இங்கிட்டு இருக்குங்க:
http://madhavipanthal.blogspot.com/2009/08/blog-post.html
//But it looks like you have stopped writing in this Blog. I would like to read your writings on Lord Muruga. kindly let me know your new blog//
:)
எழுதறது இப்பல்லாம் ரொம்ப இல்லீங்க மெய்யப்பன்!
முருகனருள் என்னும் வலைப்பூவில், பாடல்கள் மட்டும் குழுவினராகச் சேர்ந்து இடுவோம்! அதற்கான சுட்டி..
http://muruganarul.blogspot.com
ஏன் எழுதறதில்லை இப்போ? அதான் எனக்கும் தெரியணும்!! :(
//கவிநயா said...//
ஆகா! எப்படிக்கா இப்படி படக்-ன்னு என்னை ட்ரேஸ் பண்றீங்க? :)
//ஏன் எழுதறதில்லை இப்போ? அதான் எனக்கும் தெரியணும்!! :(//
அட, இராகவன் கூடத் தான் எழுதறதில்லை! அவனை கேட்க மாட்டீங்களே! அவனுக்கும் சேர்த்து என்னையே கேட்பீங்களே? :)))
அதான் முருகனருள்/கண்ணன் பாட்டுல அப்பப்போ பாட்டு போடுறேனே-க்கா! என்ன உங்களை மாதிரி சொந்தமா பாட்டெழுத வராது! :)
//அதான் முருகனருள்/கண்ணன் பாட்டுல அப்பப்போ பாட்டு போடுறேனே-க்கா! என்ன உங்களை மாதிரி சொந்தமா பாட்டெழுத வராது! :) //
இந்தக் கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம்! உங்களுக்கு பாட்டு எழுத வரும்; அதுக்கும் மேலே என்னென்ன இருக்கோ எல்லாமே வரும்னு எனக்கு தெரியுமே!
தயை செய்து நீங்க கந்தர் அலங்காரத்தையாவது தொடரணும். ப்ளீஸ்!
Dear KRS, I request you to continue writing & explaining the "Kanthar Alangaram". Arunagiri Nathar poems are sweet and your explanations are great. :-)
Post a Comment