ஒரு மாத சூறாவளி திருப்பாவைப் பதிவுகளினால், கந்தரலங்காரப் பதிவுகள், தடைபட்டுப் போயிருந்தன! கோதை முருகனுக்கு மாமியாச்சே! மறு பேச்சு பேசுவானா நம்ம பய புள்ள? மாமியாருக்காக காத்துக் கிடப்பானே! உருகிப் போயிருவானே! மறுபேச்சு பேசவும் முடியுமா என்ன? :)
தமிழ்க் கடவுள் முருகவேள், தன்னிகரில்லாக் கோதைத் தமிழுக்கு வழி விட்டு காத்துக் கிடந்தான்! அன்பு சேர்த்துக் கிடந்தான்! உடல் வேர்த்துக் கிடந்தான்!
இன்னிக்கி மீண்டும் முருகனுக்கு அலங்காரத்தைத் துவக்கலாம்-ன்னு நினைச்சேன்! ஆகா, வந்த அலங்காரச் செய்யுளும் அதே மனநிலையில் தான் இருக்கு = இடைபட்ட, தடைபட்ட-ன்னு வருது!
சென்ற பகுதியில் சும்மா இருத்தல்-ன்னா என்ன-ன்னு பார்த்தோம்!
* நடக்க வேண்டியதை/இறைவனை முன்னுக்குத் தள்ளி, "நம்"மைப் பின்னுக்குத் தள்ளினால்....."சும்மா" இருக்க முடியும்-ன்னும் பார்த்தோம்!
* இந்தப் பகுதியில் அப்படிச் சும்மா இருக்கும் மனத்தில், முருகன் எப்படி வந்து குடி இருக்கிறான்-ன்னு பார்க்கலாமா?
என்னாது? முருகன் குடி இருக்கானா? இது வரை ஒத்த ரூவா கூட வாடகையே கொடுத்ததில்லையே-ன்னு ஆச்சர்யப்படக் கூடாது! :)
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்! குடியிருக்க நான் வருவதென்றால், வாடகை என்ன தர வேண்டும்?

வாங்க பார்க்கலாம்...முருகன் மயில் மேல் பறந்து வரும் அழகுக் காட்சியை!
8 comments:
படங்களும் ..பாடலுக்கு உங்கள் விளக்கமும் அருமை..
KRS பின்னி பெடலெடுக்கறீங்க ..சூப்பர்
//கிரி said...
படங்களும் ..பாடலுக்கு உங்கள் விளக்கமும் அருமை
KRS பின்னி பெடலெடுக்கறீங்க ..சூப்பர்//
நன்றி கிரி!
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்-ன்னு சொல்வது வழக்கம்!
ஆனா இப்போ, குமரன் வரும் இடமெல்லாம் "கிரி" வருவது வழக்கம்! :)
அடடா, அருமையா இருக்கு. பாடல்களும் பொருளும், பொருள் சொன்ன விதமும்... படங்களும் அப்படியே. முருகன் மயில் மீது வேகமா வர்ற படத்தை எங்கே பிடிச்சீங்க? :) மேரு மலை பத்தி நீங்களே சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்து...
//கவிநயா said...
அடடா, அருமையா இருக்கு. பாடல்களும் பொருளும், பொருள் சொன்ன விதமும்... படங்களும் அப்படியே//
நன்றி-க்கா!
//முருகன் மயில் மீது வேகமா வர்ற படத்தை எங்கே பிடிச்சீங்க? :)//
முருகனைக் கேட்டேன்!
முருகன் கொடுத்தான்!
மயிலார் நம்ம ஆருயிர் தோஸ்த் வேற! :)
//மேரு மலை பத்தி நீங்களே சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்து...//
நீங்களே சொல்லலாமே-கா!
சரி, குமரன், குமரன்-ன்னு ஒரு சூப்பர் ஸ்டார் வருவாரு! அது வரை வெயிட் மாடுவோம்!
கந்தர் அலங்காரம் முழுவதுமே இப்படித் தானா? கொஞ்சம் கடினமான சொற்களைப் போட்டுத் தான் அருணகிரிநாதர் எழுதியிருப்பார் போலிருக்கிறது. கந்தரனுபூதி இந்த அளவிற்குக் கடினமாக இல்லை என்று தோன்றுகிறது. சரி தானா?
அடிக்கடி முருகன் இந்த மயிலின் மீது ஏறி வலம் வருவாரோ? அதனால் தான் ஆழிப்பேரலைகளும் நில நடுக்கங்களும் ஏற்படுகின்றதோ? மயிலிடமும் முருகனிடமும் சொல்லி வைக்க வேண்டும் - ஊர் சுற்றாமல் ஒரே இடத்தில் அமரும் படி.
சலதின்னா ஜலதியின் தற்சம தமிழாக்கம் என்று தெரிகிறது. திமிர உததியில் வரும் உததி என்றால் என்ன?
//சரி, குமரன், குமரன்-ன்னு ஒரு சூப்பர் ஸ்டார் வருவாரு! அது வரை வெயிட் மாடுவோம்!//
அவர் மயிலார் மேல ஏறிப் பறந்து போயிட்டாரு. வேணும்னா கிரியைக் கேளுங்க. அவர் தான் குமரன் இருக்கும் இடமெல்லாம் இருக்கிறார். :-)
//குமரன் (Kumaran) said...
கந்தர் அலங்காரம் முழுவதுமே இப்படித் தானா? கொஞ்சம் கடினமான சொற்களைப் போட்டுத் தான் அருணகிரிநாதர் எழுதியிருப்பார் போலிருக்கிறது. கந்தரனுபூதி இந்த அளவிற்குக் கடினமாக இல்லை என்று தோன்றுகிறது. சரி தானா?//
ஆகா!
அலங்காரத்தில் அனுபூதியை விட ரெண்டு மடங்கு அதிக பாடல்கள் குமரன்! மேலும் எந்தச் சொற்கள் கடினம்-ன்னு நினைக்கறீங்க?
அனுபூதியிலும் கடினச் சொற்கள் உண்டு! உல்லாச நிராகுல, வலாரி, தலாரி, வனசம், ஆதாளி, கூதாள-ன்னு நிறைய வரும்...
சந்தக் கவி என்பதாலும் தமிழும் ஆரியமும் கலப்பதாலும் இப்படியோ?
//அடிக்கடி முருகன் இந்த மயிலின் மீது ஏறி வலம் வருவாரோ? அதனால் தான் ஆழிப்பேரலைகளும் நில நடுக்கங்களும் ஏற்படுகின்றதோ?//
ஹிஹி!
மயிலார் இப்போ என் கூடத் தான் தங்கயிருக்காரு! சொன்னேன்-ன்னு வைங்க, மின்னசோட்டா வந்து கொத்துவாரு! :))
//மயிலிடமும் முருகனிடமும் சொல்லி வைக்க வேண்டும் - ஊர் சுற்றாமல் ஒரே இடத்தில் அமரும் படி//
சுத்தற குணம் மாமன் கொடுத்தது! அம்புட்டு சீக்கிரம் போவாது! :)
//சலதின்னா ஜலதியின் தற்சம தமிழாக்கம் என்று தெரிகிறது//
நானும் அப்படித் தான் நினைச்சேன்!
//திமிர உததியில் வரும் உததி என்றால் என்ன?//
உததி=கடல்
சலதி=கடல்
இன்னும் வேற என்னென்ன?
//குமரன் (Kumaran) said...
அவர் மயிலார் மேல ஏறிப் பறந்து போயிட்டாரு//
மயில் ரொம்ப தூரம் பறக்காது! :)
//வேணும்னா கிரியைக் கேளுங்க. அவர் தான் குமரன் இருக்கும் இடமெல்லாம் இருக்கிறார். :-)//
கிரி தான் பெரும் முருக பக்தர் ஆச்சே!
திருப்பாவைப் பதிவுக்கு வந்து...என் கிட்ட அலங்காரம், முருகனருள்-ன்னு சுட்டியா வாங்கிட்டுப் போனாரே! :))
Post a Comment